ஜெயக்குமார், சத்யா, தவ்லத்பேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் இரண்டாம் கட்டளை, அக்னீஸ்வரர் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் மூதாட்டி வசந்தா (65), அவரது மகள் தேன்மொழி (35).
இவர்கள் இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து, குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீட்டில் வேலைக்காரியாக இருந்த சத்யா (25), அவரது தோழி தவ்லத்பேகம் (28), மற்றும் சத்யாவின் ஆண் நண்பர் ஜெயக்குமார் (30) ஆகிய மூவர் சதித் திட்டம் தீட்டி, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் இந்தக் கொலையைச் செய்தது தெரியவந்தது.
முதலில், மூவரும் வீட்டில் இருந்த வசந்தாவைக் கொலை செய்துள்ளனர். பின்னர், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தேன்மொழியின் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தின்போது, தேன்மொழியின் 7 வயது மகள் சுரபிஸ்ரீயையும், 8 மாதப் பெண் குழந்தையையும் கொலை செய்ய முயன்ற
தாகவும், தாக்கியதாவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தை சுரபி, தனது அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனையும், இதனை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்து.