க்ரைம்

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தூத்​துக்​குடி: கடலில் மூழ்கி 3 சிறு​வர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்த ஆறு​முகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்​திக் (12), கீதாஜீவன் நகரைச் சேர்ந்த வனராஜன் மகன் திரு​மணி (13), கதிரேசன் மகன் முகேந்​திரன் (12) உள்​ளிட்ட 9 சிறு​வர்​கள் நேற்று கடலில் குளிப்​ப​தற்​காக தாள​முத்து நகர் மொட்டை கோபுரம் கடற்​கரைக்கு சென்​றுள்​ளனர்.

அவர்​கள் அனை​வரும் கடலில் குளித்​துக் கொண்​டிருந்​த​போது, திடீரென எழுந்த ராட்சத அலை 4 சிறு​வர்​களை கடலுக்​குள் இழுத்​துச் சென்​றது.

          

கடலில் தத்​தளித்​துக் கொண்​டிருந்த ஒரு சிறு​வனை மட்​டும் மீனவர் ஒரு​வர் சிறிய படகில் சென்று மீட்​டு, கரைக்கு அழைத்து வந்​துள்​ளார்.

அதே நேரத்​தில் மற்ற 3 சிறு​வர்​களும் கடலுக்​குள் இழுத்​துச் செல்​லப்​பட்​டனர். தகவலறிந்து வந்த தாள​முத்து நகர் போலீ​ஸார் மற்​றும் தரு​வை​குளம் கடலோர பாது​காப்​புக் குழும போலீ​ஸார் படகில் சென்​று, சிறு​வர்​களை தீவிர​மாக தேடினர். எனினும், சிறுவர்களை மீட்க முடியவில்லை. அவர்கள் மூவரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்​னர், சிறுவர்கள் நரேன் ஸ்ரீகார்த்​திக், திரு​மணி, முகேந்​திரன் ஆகியோரது உடல்​கள் மீட்​கப்​பட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

இதுகுறித்து தரு​வை​குளம் கடலோர பாது​காப்​புக் குழும போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கடலில் மூழ்கி உயி​ரிழந்த 3 சிறு​வர்​களும் அப்​பகு​தி​யில் உள்ள பள்​ளி​களில் 8-ம் வகுப்பு படித்து வந்​தனர். கடலில் மூழ்கி 3 சிறு​வர்​கள் உயி​ரிழந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT