கார்த்திகேயன், வேலு, சந்திரசேகர்

 
க்ரைம்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: கார் ஓட்டுநர் நண்பர்களுடன் கைது

அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட் அணிந்து வந்தார்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சாஸ்​திரி நகர் தனியார் நிதி நிறு​வனத்​தில் ரூ.2 கோடி திருடிய கார் ஓட்​டுநர் நண்​பர்​களு​டன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை கொட்​டி​வாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் முத்​து​ராமலிங்​கம் (29). சாஸ்​திரி நகர் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிதி நிறு​வனத்​தில் கலெக் ஷன் ஏஜென்​டாக பணி​யாற்றி வரு​கிறார்.

கடந்த 12-ம் தேதி வசூலான ரூ.2 கோடியை அலு​வலக அறை​யில் உள்ள மர பீரோ​வில் வைத்து பூட்​டி​விட்​டுச் சென்​றார். மறு​நாள் காலை வந்து பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த ரூ.2 கோடி மர்ம நபர்​களால் திருடப்​பட்​டிருந்​தது தெரிந்​தது.

அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சாஸ்​திரி நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து சம்பவ இடம் மற்​றும் சுற்​றுப்​புற பகு​தி​களில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகளைக் கைப்​பற்றி ஆய்வு செய்​தனர்.

அதில் ஹெல்​மெட் அணிந்து வந்த கொள்​ளை​யன் ஒரு​வன் நிதி நிறு​வனத்​தின் கீழ்த்​தளத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த சாவியை எடுத்​து, அலு​வல​கத்​துக்​குள் சென்று பணத்தை திருடிச் செல்​வது தெரிய​வந்​தது.

தொடர் விசா​ரணை​யில் பணத்​திருட்​டில் ஈடு​பட்​டது சம்​பந்​தப்​பட்ட நிதி நிறு​வனத்​தில் கார் ஓட்​டுந​ராக பணி​யாற்றி வந்த காஞ்​சிபுரம் மாவட்​டம், வாலாஜா​பாத்​தைச் சேர்ந்த கார்த்​தி​கேயன் (33) என்​பது தெரிந்​தது. அவரது நண்​பர்​களான அதே பகு​தி​யைச் சேர்ந்த வேலு (36), சந்​திரசேகரன் (33) ஆகியோர் உடந்​தை​யாக இருந்​தது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இவர்​களை​யும் போலீ​ஸார் அடுத்​தடுத்து கைது செய்​தனர். போலீஸ் விசா​ரணை​யில், நிதி நிறு​வனத்​தில் அதி​கள​வில் பணம் இருப்​பதை அறிந்த கார்த்​தி​கேயன், தனது நண்​பர்​களு​டன் சேர்ந்து திருட திட்​டம் தீட்​டியது தெரிய​வந்​தது.

சம்​பவத்​தன்று இரவு அவர்​கள் காரில் நிதி நிறு​வனத்​துக்கு வந்​து, கார்த்​தி​கேயன் மட்​டும் தலைக்​கவசம் அணிந்து உள்ளே சென்று சாவியை எடுத்து பீரோவை திறந்து பணத்தை திருடிச் சென்​ற​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் இருந்து செலவு செய்​தது போக ரூ.1 கோடியே 97 லட்​சத்து 94 ஆயிரம் ரொக்​கம் மீட்​கப்​பட்​டது. மேலும் 3 செல்​போன்​கள் மற்​றும் குற்​றச்​சம்​பவத்​தில் பயன்​படுத்​தப்​பட்​ட காரும்​ பறி​முதல்​ செய்​யப்​பட்​டன.

SCROLL FOR NEXT