கஞ்சா கடத்தியதாக கைதானவர்கள்.

 
க்ரைம்

அரிசி மூட்டைகளுக்கிடையே பதுக்கி வைத்து ரூ.2.65 கோடி கஞ்சா கடத்திய 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அரிசி மூட்​டைகளுக்கு இடையே பதுக்கி வைத்து, ஆந்​தி​ரா​விலிருந்து தமிழகத்​துக்கு ரூ.2.65 கோடி மதிப்​புள்ள கஞ்​சாவை கடத்தி வந்த இரு​வரை போதைப் பொருள் கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

வெளி மாநிலங்​களி​லிருந்து தமிழகத்​துக்கு போதைப் பொருள் கடத்​தப்​பட்டு வரு​வ​தாக மத்​திய போதைப் பொருள் கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில் திரு​வள்​ளூர் மாவட்​டம் செங்​குன்​றம் அருகே போலீ​ஸார் கண்​காணித்​தனர்.

          

அப்​போது அந்த வழி​யாக ஆந்​தி​ரா​விலிருந்து அரிசி மூட்​டைகளை ஏற்​றிக் கொண்டு தமிழகம் நோக்கி வந்த சரக்கு வாக​னத்தை நிறுத்தி சோதித்​தனர். அப்​போது அரிசி மூட்​டைகளுக்கு இடையே பண்​டல் பண்​டலாக சுமார் 530 கிலோ கஞ்சா பதுக்கி வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார் கஞ்சா கடத்தி வந்த ஆந்​தி​ராவைச் சேர்ந்த கோட்​டகுண்டு ஜகதீஷ்வர் ராவ், அதே மாநிலத்​தைச் சேர்ந்த பாங்கி கோவர்​தன் ஆகிய இரு​வரை கைது செய்​தனர். அவர்​கள் கடத்தி வந்த கஞ்​சா​வின் சந்தை மதிப்பு ரூ.2.65 கோடி என போலீஸ் தரப்​பில் தெரிவிக்கப்​பட்​டது.

மேலும் கடத்​தலுக்கு பயன்​படுத்​திய சரக்கு வாக​ன​மும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இந்த கஞ்சா கடத்​தலின் பின்​னணி​யில் உள்ள சர்​வ​தேச கடத்​தல் கும்​பல் குறித்து போதைப் பொருள் கடத்​தல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் தொடர்ந்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT