க்ரைம்

அறந்தாங்கியில் பூட்டிய வீட்டில் 137 பவுன் திருட்டு

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் 137 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்தாங்கி அப்​துல் ஹமீது தெரு​வைச் சேர்ந்​தவர் ஹாஜா நஜி​முதீன்.

இவர் வெளி​நாட்டில்​ பணிபுரிந்து வரு​கிறார். வீட்​டில் அவரது மனைவி மற்​றும் மகள்​கள் வசித்து வரு​கின்றனர்.

          

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு தொழுகைக்​காக பள்​ளி​வாசல் சென்​று​விட்​டு வீடு திரும்பினர். அப்போது வீட்​டுக்​குள் அடை​யாளம் தெரி​யாத 2 பேர் இவர்​களை கீழே தள்​ளி​விட்டு தப்பியோடினர்.

பெட்​டி​யில் வைத்​திருந்த 137 பவுன் நகைகள் திருடு போனது தெரிய​வந்​தது. இதுகுறித்த புகாரின்​பேரில் அறந்தாங்கி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து நகைகளை திருடிவிட்டு தப்பிய மர்ம நபர்​களை தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT