கவியரசன்

 
க்ரைம்

கும்பகோணம் | பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கும்பகோணம்/தஞ்சாவூர்: கும்​பகோணம் வட்​டம் பட்​டீஸ்​வரத்​தில் பிளஸ் 1 மாணவர்​களால் தாக்​கப்​பட்​ட​தில் காயமடைந்​து, மூளைச்​சாவு அடைந்த பிளஸ் 2 மாணவர் நேற்று உயி​ரிழந்​தார். திரு​வாரூர் மாவட்​டம் இனாம்​ கிளியூரைச் சேர்ந்த குணசேகரன் மகன் கவியரசன்​(17).

இவர், கும்​பகோணம் வட்டம் பட்​டீஸ்​வரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மாதிரி மேல்​நிலைப் பள்​ளி​யில் பிளஸ் 2 படித்து வந்​தார். இந்​தப் பள்​ளி​யில் பிளஸ் 1 மற்​றும் பிளஸ் 2 மாணவர்​களுக்கு இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், 20 நாட்களுக்கு முன் கழிப்​பறைக்கு சென்று வரும் போது இருதரப்பு மாணவர் களுக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதையறிந்த பள்ளி நிர்​வாகம் மாணவர்​களை​ கண்​டித்​ததுடன், அவர்​களை சமா​தானப்​படுத்தி அனுப்பியது.

இந்​நிலை​யில், கடந்த 4-ம் தேதி பள்ளி முடிந்து மாணவர்​கள் வீடு​ திரும்பும்போது, பட்டீஸ்​வரம் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம் அருகே பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்​களிடையே மோதல் ஏற்​பட்டுள்​ளது. இதில், பலத்த காயமடைந்த கவியரசனை, தஞ்​சாவூர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​தித்​தனர்.

இதுதொடர்​பாக கவியரசன் தந்தை அளித்த புகாரின்​பேரில் பட்டீஸ்வரம் போலீ​ஸார் பிளஸ் 1 மாணவர்​கள் 15 பேரை கைது செய்​து, தஞ்​சை அரசு கூர்​நோக்கு இல்​லத்​தில் அடைத்​தனர். இதற்​கிடையே, கவியரசன் நேற்று முன்​தினம் மூளைச்​சாவு அடைந்​த​தால், அவர் தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார். இதையடுத்​து, அசம்​பா​விதங்​கள் ஏதும் நேரி​டாத​வாறு பள்​ளி, இனாம்​கிளியூர் மற்​றும் பட்​டீஸ்​வரம், முழையூர், தேன்​படுகை, கடைத்​தெரு உள்​ளிட்டபகு​தி​களில் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ளனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக கவியரசனின் நண்​ப​ர் கோபி கூறியதாவது: கடந்த 4-ம் தேதி மாலை பள்ளி முடிந்து கவியரசனுடன் சேர்ந்து பிளஸ் 2 மாணவர்​கள் 6 பேர் வீட்​டுக்​குச் சென்​று ​கொண்​டிருந்​தோம்.

அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம் அரு​கில் வந்​த​போது, அங்​கிருந்த பிளஸ் 1 மாணவர்​கள் 20-க்​கும் மேற்​பட்​டோர் எங்​களிடம் சண்டை போடலாமா என கேட்​டதுடன், எங்கள் பெற்றோரை தரக்​குறைவாகப் பேசினர். இதை கவியரசன் தட்​டிக்​கேட்​டார். பின்​னர் அங்​கிருந்து நகர்ந்​த​போது, அவர்கள் பின்னால் வந்து எங்களைத் தாக்கினர்.

கவியரசனை சுற்​றி வளைத்து ரீப்​பர் கட்​டையால் சரமாரி​யாக தாக்​கியதால், அவருக்கு வலிப்​பு, மூச்​சுத்​திணறல் ஏற்​பட்டு கீழே விழுந்​தார். ஆனால், கவியரசனை தூக்கி நிறுத்​திய அவர்கள், நடிக்​கிறியா என்று கேட்டு மீண்​டும் தாக்​கினர்.

இதில் பலத்த காயமடைந்த கவியரசன் அங்​கேயே விழுந்​த​தால், அனை​வரும் ஓடிவிட்டனர்” என்​றார். 7 பிரிவு​களில் வழக்​கு இக்கொலை தொடர்பாக 7 பிரிவு​களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உயி​ரிழப்பு சம்பவத்தை அடுத்து நேற்று காலை தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி​யில் மாணவனின் பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் குவிந்​தனர். அப்​போது, கவியரசனை தாக்​கிய​தில் 15 பேர் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மேலும், 10 பேரை​யும் கைது செய்ய வேண்​டும். பாதிக்கப்பட்ட குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும். ரூ.50 லட்​சம் இழப்​பீடு தர வேண்​டும் என்​றும், ஆட்சி​யர் வந்​தால் தான் உடலை பெறுவோம் என்றும் கூறினர். இதையடுத்​து, அவர்கள் ஆட்​சி​யர் பா.பிரியங்கா பங்​கஜத்​திடம் கோரிக்​கை ​வைத்​தனர்.

இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்​வ​தாக உறுதியளித்ததை தொடர்ந்து, உடற்​கூறு ஆய்வு செய்​யப்​பட்​டு, உறவினர்​களிடம் உடல் ஒப்படைக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT