தமிழ் சினிமா

ஜி.​வி.பிர​காஷ் குரலில் திருவாசகப் பாடல்

செய்திப்பிரிவு

இசை அமைப்​பாள​ரும் நடிகரு​மான ஜி.​வி.பிர​காஷ் குமார், திரு​வாசகத்தை முழு​மை​யான இசை ஆல்​ப​மாக உருவாக்க முடிவு செய்​துள்​ளார். அதன் முதல் படி​யாகத் திரு​வாசகத்​தின் முதல் பாடலுக்கு இசை அமைத்​து, பாடி தனது யூடியூப் சேனலில் வெளி​யிட்​டுள்​ளார். இந்​தப் பாடலின் ஒரு பகு​தி​யை, டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.​வி.பிர​காஷ் இசை நிகழ்ச்​சி​யாக வழங்கி​யிருந்​தார்.

“பாரம்​பரிய ஆன்​மிக இலக்​கி​யத்தை இன்​றைய தலை​முறைக்கு எளி​தாகக் கொண்டு செல்ல வேண்​டும் என்ற நோக்​கத்​துடன்​, இசை வடிவ​மைப்​பில்​ நவீன ஒலியமைப்பை​யும்​, பாரம்​பரிய பக்​தி சுவையை​யும்​ நுட்பமாக இப்​பாடலில்​ ஜி.​வி.பிர​காஷ் இணைத்​துள்​ளார்​” என்​று அவர்​ தரப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இப்​பாடல்​ இணையத்தில்​ வரவேற்​பைப்​ பெற்​று வருகிறது.

          
SCROLL FOR NEXT