பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் 3-வது படத்துக்கு ‘மொத ராத்திரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா என பலர் நடிக்கின்றனர். சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்கிறார். பரத் சங்கர் இசை அமைக்கிறார். இப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
“வழக்கத்துக்கு மாறான திருமணம், இரவு, அறிமுகமில்லாத 2 நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது. அதுதான் படம். உணர்வுப்பூர்வமான, என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயம் கொடுக்கும்” என்கிறார் இயக்குநர்.