சபரி, ரோகித், ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் நடித்துள்ள படம், “99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு”.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி எழுதி இயக்கி,இசை அமைத்து, தயாரித்துள்ளார். சேவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி எம்.எஸ்.மூர்த்தி கூறும்போது “சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இதன் கதை நடக்கிறது. அதனால் தான் இந்தப் படத்துக்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்பது அறுபத்தியாறு’ என்று பெயர் வைத்துள்ளோம்.
அந்தக் குடியிருப்பில் அவ்வப்போது நடைபெறும் சில அமானுஷ்ய சம்பவங்கள், குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்திப் பீதி கொள்ள வைக்கிறது. எதனால் அப்படி நடக்கிறது?அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பதைச் சபரியும், ரக்சிதாவும், ஸ்வேதாவும், எம்.எஸ்.மூர்த்தியுடன் சேர்ந்து கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அது முடிந்ததா என்பது திரைக்கதை.
தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற பகுதிகளில் புத்தமடாலயத்தில் ஐநூறு புத்த பிக்குகளின் மத்தியில் பாடல் களையும் சில காட்சிகளையும் படமாக்கியுள்ளோம். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது” என்றார்.