தமிழ் சினிமா

‘99/66’ படத்துக்காக புத்த மடாலயங்களில் ஷுட்​டிங்

செய்திப்பிரிவு

சபரி, ரோகித், ரக்​சிதா மகாலட்​சுமி, ஸ்வே​தா, பவன்​கிருஷ்ணா, கே.ஆர்​.​விஜ​யா, கே.எஸ்​.வெங்​கடேஷ், எஸ்​.சினே​கா, குமாரி கனிஷ்​கா, ஸ்ரீலே​கா, சிங்​கம் புலி, பி.எல்​.தேனப்​பன் ஆகியோர் நடித்​துள்ள படம், “99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு”.

மித்ரா பிக்​சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்​பில் எம்​.எஸ்​.மூர்த்தி எழுதி இயக்​கி,இசை அமைத்​து, தயாரித்​துள்​ளார். சேவிலோ ராஜா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

இப்படம் பற்றி எம்​.எஸ்​.மூர்த்தி கூறும்​போது “சென்​னை​யில் உள்ள 99 வீடு​கள் கொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்​பில் இதன் கதை நடக்​கிறது. அதனால் தான் இந்​தப் படத்​துக்கு ‘99/66 தொண்ணூற்று ஒன்​பது அறு​பத்​தி​யாறு’ என்று பெயர் வைத்​துள்​ளோம்.

அந்​தக் குடி​யிருப்​பில் அவ்​வப்​போது நடை​பெறும் சில அமானுஷ்ய சம்​பவங்​கள், குடியிருப்பு வாசிகளைப் பயமுறுத்​திப் பீதி கொள்ள வைக்​கிறது. எதனால் அப்​படி நடக்​கிறது?அதன் பின்​னணி​யில் இருப்​பது என்ன? என்​ப​தைச் சபரி​யும், ரக்​சி​தா​வும், ஸ்வேதா​வும், எம்​.எஸ்​.மூர்த்​தி​யுடன் சேர்ந்து கண்​டு​பிடிக்க முயல்​கிறார்​கள். அது முடிந்​ததா என்​பது திரைக்​கதை.

தாய்​லாந்​து, பர்​மா, இலங்​கை போன்​ற பகு​தி​களில்​ புத்​தமடால​யத்​தில் ஐநூறு புத்​த பிக்​கு​களின்​ மத்​தி​யில்​ பாடல்​ களை​யும்​ சில காட்​சிகளை​யும்​ படமாக்​கி​யுள்​ளோம்​. விரை​வில்​ படத்​தின்​ இசை வெளியீட்​டு விழா பிரம்​மாண்டமாக நடைபெற உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT