விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘ரணபாலி’. 1850-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ராகுல் சங்கிருத்யன் இயக்கியுள்ளார். பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகளின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ‘தி மம்மி’ மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் செப்.11-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் ரிலீஸ் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அக். 16-ல் வெளியாகிறது. ரஜினியின் ‘ஜெயிலர் 2’, அக்.15-ம் தேதியும் தனுஷின் ‘ஓம்’ அக்.16-ம் தேதியும் வெளியாக இருப்பதால் கடுமையான பாக்ஸ் ஆபீஸ் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.