தமிழ் சினிமா

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

செய்திப்பிரிவு

அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. 8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம​பாணி விருது வழங்​கப்பட இருக்​கிறது.

இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் அறிக்கை மூலம் தெரி​வித்​துள்​ளனர். இந்​திய மற்​றும் சர்​வ​தேச கலைஞர்​கள், பல்​வேறு துறை​களைச் சேர்ந்த முக்​கிய பிர​முகர்​கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்​னிலை​யில், ஜன. 28 அன்று மாலை​யில் நடை​பெறும் விழா​வின் தொடக்க நிகழ்ச்​சி​யில் இவ்​விருது அவருக்கு வழங்​கப்பட இருக்​கிறது.

திரைப்பட விமர்​சகர் லத்​திகா பட்​கோங்​கர் (தலை​வர்), திரைப்​பட இயக்குநர்​களான அசுதோஷ் கோவாரிக்​கர், சுனில் சுக்​தங்​கர், சந்​திர​காந்த் குல்​கர்னி ஆகியோர் அடங்கிய குழு இளை​ய​ராஜாவை, இந்த விருதுக்​குத் தேர்ந்​தெடுத்​துள்​ளது. அவருக்​கு, பத்​ம​பாணி நினை​வுச் சின்​னம், பாராட்​டுப் பத்​திரம், ரூ.2 லட்​சம் ரொக்​கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்​னர் இந்த விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்​தர், மூத்த இயக்​குநர் ​- எழுத்தாளர் சாய் பரஞ்ச்​பே, நடிகர் ஓம் பூரி போன்​றோர்​ பெற்றுள்​ளனர்​.

SCROLL FOR NEXT