தமிழ் சினிமா

உடன் பிறவா உடன் பிறப்பு - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 33

Guest Author

என்​னிடம் மானேஜ​ராக இருந்​தவர், தம்பி அருணாச்​சலம். அவர் நிறைய விஷ​யங்​களில் என்​னிடம் ஆலோ​சனை கேட்​பார். நானும் அவரிடம் கேட்​பேன். தொழில் விஷய​மா​னாலும் சரி, குடும்​பம் தொடர்​பாக​வும் சரி. எனக்கு இன்​சூரன்ஸ் எடுக்க வேண்​டும் என்று பேசிக்​கொண்​டிருந்த போது, அவர் ஒரு முகவரை அனுப்​பி​னார். அவர் பெயர் செபாஸ்​டியன் இன்​ப​ராஜ்.

அவர் மனைவி புனி​தா. மகன் பெயர் நைஜில், மகள் இன்​பென்​டா. இன்​சூரன்ஸ் ஏஜென்​டாக அறி​முக​மான செபாஸ்​டியன், பிறகு என் குடும்​பத்​துட​னும் என்​னுட​னும், என் உடன் பிறந்த தம்பி மாதிரி ஒட்​டிக் கொண்​டார். எனக்கு எந்த வேலை என்​றாலும் சரி, அவர் கவனித்​துக் கொள்​வார். நான் இரண்டு வீடு​களை வாடகைக்கு விட்​டிருந்​தேன்.

அதன் வாடகை, அதில் ஏதும் ரிப்​பேர் செய்ய வேண்​டும் என்​றாலும் அதுதொடர்​பான அனைத்து வேலைகளை​யும் பார்த்​துக்​கொள்​வார். எனக்கு எல்லா விஷ​யங்க ளிலும் அவர்​தான் உறு​துணை.

சில சிறுகதைகளை நான் என் குரலில் பேசி வெளி​யிட்​டிருக்​கிறேன். லால்​குடி சாது ராம் என்​பவர் கதைகளை எழுதி அனுப்​பு​வார். நான் அதை சரி செய்து படிப்​பேன். அப்​படி அவர் அனுப்பிஇருந்த ஒரு கதைக்கு ‘அப்​பா- மகள்’ என்று தலைப்பு வைத்து அதில் வரும் போலீஸ் அதி​காரி கதா​பாத்​திரத்​துக்கு செபாஸ்டி யன் இன்​ப​ராஜ் என்ற பெயரை வைத்​திருந்​தேன்.

அவர் மனை​விக்கு புனிதா என்ற பெயரை​யும் மகளுக்கு இன்​பென்டா என்​றும் வைத்​தேன். அதை அவருக்கு அனுப்பி வைத்​ததும் அதைக் கேட்​டு​விட்டு போனில் அழ ஆரம்​பித்​து​விட்​டார். “ஏன் அழறீங்க தம்​பி? இது சின்ன மேட்​டர்​தானே?” என்று சொன்​னேன்.

பிறகு வீட்​டுக்கு வந்து என் மனை​வி​யிடம், “அண்​ணி, எவ்​வளவு பெரிய கவுர​வத்தை அண்​ணன் எனக்கு கொடுத்​திருக்​காங்க” என்று கண்​கலங்​கி​னார். “அவர் குரூப்​பில் எல்​லோருக்​கும் அனுப்ப அனை​வரும், “என்​ன​டா.. உன் அண்​ணன் உன் மேல இவ்​வளவு பாசம் வச்​சிருக்​கார் என்று சொன்​னார்​கள்” என்​றார்.

செபாஸ்​டியன் இன்​ப​ராஜ்

எல்​.ஐ.சி-​யில் அவர் ஏஜென்​டாக இருந்​தார். அவர் ஆபிஸில் ஏதாவது பங்​ஷன் என்​றால் அவரிடம் என்னை அழைத்து வரச்​சொல்​வார்​கள். நானும் செல்​வேன். அவர் மூல​மாக என் குடும்​பத்​தில் அனை​வருக்​கும் இன்​சூரன்ஸ் போட்​டிருக்கிறேன்.

அவர் ஒவ்​வொரு வருட​மும் விரதம் இருந்து திருச்​சி​யில் இருந்து வேளாங்​கண்​ணிக்கு பாத​யாத்​திரை செல்​வார். செல்​லும் முன் “அண்​ணே, உங்​களை பார்க்​கணும்​ணே” என்று வீட்​டுக்கு வந்​து​விடு​வார். நான் நெற்​றி​யில் பட்டை பட்​டை​யாக விபூதி பூசி​யிருந்​தா​லும் அவர் என் முன் மண்​டி​யிடு​வார்.

நான் தேவால​யங்​களில் ஃபாதர்​கள் சொல்​வது போல அவருக்கு ஆசி வழங்​கி, நெற்​றி​யில் சிலுவை போட்ட பின்​தான் கிளம்​பு​வார். இதை எதற்​காகச் சொல்ல வந்​தேன் என்​றால், மதங்​களை கடந்து நாங்​கள் அண்​ணன் - தம்​பி​யாக இணைந்​திருந்​தோம் என்​ப​தற்​காக​தான்.

“அண்​ணே, நான் கடைசி வரைக்​கும் உங்​களு​டன் இருப்​பேன் அண்​ணே. என்ன பிரச்​சினை என்​றாலும் நான் பார்த்​துக்​கொள்​கிறேன்” என்று சொல்​கிற தம்பி அவர். ‘விந்​தை’ என்ற படத்​தின் படப்​பிடிப்பு போரூரில் நடை​பெற்ற போது “நான் ஷூட்​டிங் வரலா​மாண்​ணே?” என்று கேட்​டார். ““என்ன தம்பி இப்​படி கேட்கி றீங்க, வாங்க” என்​றேன்.

வந்​தார். நான் நடிப்​பதை வியந்து பார்த்​துக் கொண் டிருந்​தார். நாங்​கள் பழனி கோயிலுக்​குப் போன போது மகன் நைஜிலை அழைத்​துக்​கொண்டு எங்​களு​டன் வந்​து​விட்​டார். நாங்​கள் வேளாங்​கண்ணி போனால், தீர்த்​தம் வாங்கி வந்து அவருக்கு கொடுப்​போம். அவரும் அப்​படி செய்​வார். எங்​கள் இரு​வருக்​குள்​ளும் பெரிய பிணைப்பு இருந்​தது.

நான் நசரத்​பேட்​டைக்கு குடிவந்த பிறகு, தூர​மாக இருப்​ப​தால் அவர் என் வீட்​டுக்கு வரு​வது குறைந்​து​விட்​டது. ஆனாலும் எனக்கு செய்​யும் உதவி​களை செய்து கொண்டே இருந்​தார். பிறகு “வேறு வீடு மாறி​விட்​டேன், நீங்​கள் வரணும்” என்று அழைத்​துக்​கொண்டே இருந்​தார்.

‘வர்​றேன்​’என்று சொல்​லிக் கொண்​டிருந்​தேன். கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை அவர் மகன் போன் பண்​ணி​னார். “அப்பா வேளாங்​கண்​ணிக்கு பாதை​யாத்​திரை போனாங்க. ஹார்ட் அட்​டாக்லதவறிட்​டாங்க” என்று சொன்​னதும் எனக்கு பகீரென்​றது. அவருக்கு வயது 53, 54 தான் இருக்​கும்.

உடனே, காலம் சென்ற ஏழு​மலை​யும் நானும் திருச்​சிக்கு சென்று அவர் உடலைப்​பார்த்து கதறி அழுது விட்டு வந்​தோம். அப்​படி என் மீது அக்​கறை கொண்ட உடன் பிற​வா, உடன் பிறப்​பின் இறப்​பைத் தாங்​கிக்​கொள்ள முடிய​வில்​லை.

இறைவன் ஒவ்​வொரு உறவாக கொடுக்​கிறான். பிறகு அவனே எடுத்​துக்​கொள்​கிறான். அதனால் வரும் வேதனையை நாம் அனுப​விப்​பது​தான் நாம் அறிந்தோ அறி​யாமலோ செய்​த பாவங்​களுக்​கான தண்​டனையோ? அவன்​ கணக்​கை யார்​ அறி​வார்​?

(திங்​கள்​தோறும் பேசுவோம்)

SCROLL FOR NEXT