தமிழ் சினிமா

‘நல்ல படம் பண்​றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா...’ - இயக்குநர் சசி நேர்​காணல்

செ. ஏக்நாத்ராஜ்

தனது பெரும்​பான்​மை​யான படங்​களில் பெண்​களின் பிரச்சினைகளை, உணர்​வு​களை மென்​மை​யாகப் பேசி​யிருக்​கிற சசி, இப்​போது ‘நூறு சாமி’​யுடன் வந்​திருக்​கிறார். விஜய் ஆண்​டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்​திருக்​கும் இந்​தப் படத்​தில், இசை அமைப்​பாளர் பாலாஜி ராம், எடிட்​டர் ஹரிஷ் யுவ​ராஜ், ஒளிப்​ப​தி​வாளர் தர்​ஷன் ஆகிய 3 புது​முகங்​களை அறி​முகப்​படுத்தி இருக்​கிறார். விஜய் ஆண்​டனி தயாரித்​திருக்​கும் இந்​தப்​படம் விரை​வில் வெளி​யாக இருக்​கும் நிலை​யில், இயக்​குநர் சசி​யிடம் பேசினோம்.

‘நூறு சாமி’ உண்​மைக் கதைன்னு சொல்லி இருக்​கீங்​களே?

ஆமா. கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​துல இருக்​கிற ஒரு கிராமத்​துல நடந்த கதை. ஒரு ரியாலிட்டி ஷோவுல ஒரு பெண்​ணுக்கு நடந்த சம்​பவத்​தைப் பார்த்​ததும் அது என்னை பாதிச்​சது. அந்த சம்பவத்தை அந்த பெண்​ணோட மகனே புத்​தகமா எழுதியிருக்கார்னு தெரிஞ்​சதும் அதை படிச்​சுப் பார்த்​துட்டு அவரை கூப்​பிட்​டுப் பேசினேன். அம்மா பற்றி ரத்​த​மும் சதையுமான ஒரு வாழ்க்கை கிடைச்​சது. அது​தான் ‘நூறு சாமி’.

‘பிச்​சைக்​காரன்’ல நீங்க காட்​டிய அம்​மாவுக்​கும் ‘நூறு சாமி’ காண்பிக்​கப் போற அம்​மாவுக்​கும் என்ன வித்​தி​யாசம்?

‘பிச்​சைக்​காரன்’ல அம்​மாவை, மகன் தெய்​வ​மாகப் பார்த்​தான். ‘அம்மா ஒரு தெய்​வம், அவங்​களை எப்​படி மிஸ் பண்​ணுவேன்​’னு நினைக்​கிற மகன், அவங்​களுக்கு உடல் நிலை சரி​யில்​லாம போனதும் யாரும் பண்​ணாத ஒரு விஷ​யத்தை பண்​ணி​னான். ஆனா, இந்​தப் படத்​துல அம்​மாவை அவன் தெய்​வமா பார்க்​கலை. மனுஷி​யாகத்​தான் பார்க்​கிறான்.

‘கட​வுள், தெய்​வம், நூறு சாமிலாம் கிடை​யாது. நீ மனுஷி​தான்​’னு அம்​மாவை கனிவா பார்க்​கிறான். அப்​படி அம்​மாவைப் பார்க்​கிற அந்த அம்​மாவுக்​காக மகன் பண்​ணின விஷய​மும் எனக்கு புதுசா தெரிஞ்​சது. புதுசுங்​கறதை விட, ஓர் அழகான வாழ்க்​கையை அது காட்​டிச்​சு. அது​தான் இந்​தப் படம். ‘பிச்​சைக்​காரன்’ அம்​மாவை விட இந்த அம்மா வேற பரி​மாணத்​துல இருப்​பாங்க.

இந்​தப் படத்​தோட காட்​சிகளை பார்த்​துட்டு சில இயக்​குநர்​கள் நெகிழ்ச்​சியா பதிவு போட்​டிருந்தாங்​க...

நானும் பார்த்​தேன். எனக்கு தனிப்​பட்ட முறை​யில பிடிச்ச கதைன்னா, நான் இயக்​கிய ‘பூ’-வை சொல்​வேன். அதே மாதிரி இந்தப்​படத்​துல​யும் அதி​க​மான வாழ்க்கை இருக்​கு. அதாவது ‘பூ’ மாதிரி ஒரு கதையை, ‘பிச்​சைக்​காரன்’ மாதிரி மக்​களுக்​குப் பிடிச்ச முறை​யில சொல்​லணும்னு ரொம்ப மெனக்கெட்டிருக்கோம். அதுக்​கான பலன்​தான் அந்​தப் பாராட்டுன்னு நினைக்​கிறேன். பார்த்​தவங்க எல்​லோருமே ரொம்ப சுவாரஸியமா இருக்​கு, எப்​படி இவ்​வளவு ‘டெப்​தா’ கதை சொல்​றீங்​கன்னு கேட்​கிறாங்க. இங்க சக்​சஸ்​புல்​லான படத்தை பண்​றது கொஞ்​சம் கஷ்டப்பட்​டாலும் ஈஸி​தான். நல்ல படம் பண்றது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனா, ஒரு நல்ல படத்தை சக்​சஸ் புல்லா பண்​றது ரொம்ப கஷ்டம்.

விஜய் ஆண்​டனியோட உங்​களுக்கு 2-வது படம். கிராமத்து கதாபாத்​திரத்​துக்கு எப்​படி பொருந்​துறார்?

இதுல கரும்பு வெட்​டுறவரா விஜய் ஆண்​டனி நடிச்​சிருக்​கார். இந்தக் கதை​யில சுவாசி​கா​வின் கேரக்​டரோட ஒப்​பிடும்​போது அவருக்​கான ‘ஸ்​கிரீன் ஸ்பேஸ்’ குறைவு​தான். அதனாலயே அவர்கிட்ட இந்​தக் கதையை சொல்​லலா​மா, வேண்​டா​மான்னு இருந்​தேன். அவர், ‘எனக்கு கதை இருக்​கு​மா?’ன்னு கேட்​கும்​போது, ‘இந்​தக் கதை​தான் இருக்​கு’ன்னு சொன்​னேன். கேட்​டது​மே, ‘பிச்சைக்​காரன்’ கதையை கேட்​டுட்டு எப்​படி ஃபீல் பண்ணினாரோ, அதே மாதிரி கண்​ணீர் விட்​டார். உடனடி​யா, ‘என்னோட பேனர்ல இன்னொரு நல்ல படம் வரணும்​’னு சொல்​லிட்டு நடிக்​கிறேன்​னார். அவர் தயாரிப்​புல வர்ற நல்ல படமா, கால​காலத்​துக்​கும் இது நிற்கும். படம் பார்த்​துட்டு வரும்​போது நாலு, அஞ்சு விஷ​யங்​களை பெருசா பேசு​வாங்​கன்னு நம்பறேன். அதுல ஒண்​ணு, விஜய் ஆண்டனி நடிப்​பு. அதே போல சுவாசிகாவோட நடிப்​பும் பேசப்படும். அவங்க கேரக்​டருக்கு எனக்கு வேற எந்த ஆப்​ஷனும் இல்​லை. படத்​துல ஒரு வசனமே வரும், ‘இப்​படி நடிக்​கிறியே நீ சாவித்​ரி​யா, சிவாஜி​யா?’ன்​னு. அது உண்​மை​தான். படம் முடிஞ்​சதும் நானே நினைச்​சேன் சுவாசி​கா, சாவித்​திரி​தான்​னு.

இந்​தப் படம் என்ன மெசேஜ் கொடுக்​கும்?

மெசேஜ் அப்​படின்னு சொல்ல முடி​யாது. இந்​தப் படம் பார்த்​துட்டு வெளிய வர்ற ஒவ்​வொருத்​தரும், ‘நான் ஏன் எங்க சித்​திய அப்​படி விட்​டுட்​டேன், எங்க பெரி​யம்​மாவை ஏன் இப்​படி கண்​டுக்​காம போயிட்​டேன், இந்​தப்​படத்​துல வர்ற பையன் மாதிரி, நாம ஏன் பண்​ணக் கூடாது?’ன்னு நினைப்​பாங்க. ஒவ்​வொருத்​தரும் தங்களோட வாழ்க்​கை​யில இருந்தோ அல்​லது சொந்​தத்​துக்​குள்ள இருந்தோ ஒருத்​தர் வாழ்க்​கையை பார்த்த உணர்வை இந்​தப் படம் கொடுக்​கும். படம் பார்க்கிற எல்​லோருமே ஒரு கேள்​வியோட வருவாங்க. இது, ‘பூ’​வும் ‘பிச்​சைக்​காரனு’ம் கலந்த படம். நான் நினைச்ச உயரத்​துக்கு இந்​தப் படம் போகலை​னாலும் இந்த வருடத்தோட மிகப்​பெரிய பேசுபொருளா இருக்​கும்.

‘பூ’ படத்துக்குப் பிறகு நாவல்களை, சிறுகதைகளை அதி​கம் படமா பண்​ணுவீங்​கன்னு எதிர்​பார்ப்பு இருந்​துச்​சு...

உண்​மை​தான். இந்​தக் கதையை கூட ஒரு புத்​தகத்​துல இருந்​து​தான் எடுத்​தேன். இது ஒரு வாழ்க்​கைக் கதை, அதை அனு​மதி வாங்​கி​ எடுக்​கறேன். சிறுகதைகள்ல இருந்​தும் நாவல்ல இருந்​தும் கதைகளை எடுக்​கும்​போதும் அதுல உயிர் இருக்​கும். அதை​தான் நானுமே விரும்​பறேன்.

பெரிய ஹீரோக்​களை வச்சு படம் பண்​றதை வேணும்னே தவிர்க்கிறீங்​களா?

2008-ல எழுத்​தாளர் மேலாண்மை பொன்​னு​சாமிகிட்ட பேசிட்டிருக்கும்​போது, ‘நான் எப்​ப​வும் கதை​யாகத்​தான் எதை​யும் யோசிப்​பேனே தவிர, ஹீரோ​யிசம் அதுக்குள்ள இருக்​கணும்னு நினைக்க மாட்​டேன்​’னு சொன்​னேன். அவர் சொன்​னார், “ஹீரோயிசம் தப்பான விஷ​யம் இல்​லை. எது ஹீரோ​யிசம் அப்படிங்​கறது​தான் முக்​கி​யம். காந்​தியை ரயில்ல இருந்து தள்​ளி​விடும்​போது, இதுக்கு ஒரு முடிவு கட்​ட​ணும்னு அவர் எந்​திச்சு நின்னார்ல, அது​தான் காந்தியின் ஹீரோ​யிசம். நீங்க எதை ஹீரோ​யிச​மாக தேர்ந்​தெடுக்​கிறீங்​களோ அதுல​தான் தப்​பு, ரைட்டுன்னு இருக்கு”ன்னார். அது இப்​ப​வும் என் மனசுக்​குள்ள இருக்​கு. அடுத்து ஒரு ஹீரோ கதையை​தான் தேடிட்டு இருக்​கேன். அடுத்த படத்​துல ஹீரோ​யிசத்​தோட​தான் வரு​வேன்.

சமீபத்​துல வர்ற ‘மாடர்ன் டே’ காதல் படங்​களை கவனிக்கிறீங்களா?

கண்​டிப்​பா. ‘வித் லவ்’ படம் எனக்கு பிடிச்​சிருந்​தது. ‘சிறை’​யும் நல்லா இருந்​தது. நான் குறும்​படங்​களை​யும் அதி​கமா பார்ப்​பேன். அதுல இன்​றைய இளைஞர்​கள் கையாள்ற உத்​தி​களை கத்துக்கறதுக்கு நிறைய இருக்​கு. ‘யூத்​’களுக்கு என்ன சொல்ல விரும்​பறீங்​க?ன்னு யாராவது கேட்​டா, ‘அவங்​களை சொல்ல சொல்​லுங்க, அவங்​ககிட்ட இருந்து நிறைய கத்​துக்க வேண்டியிருக்கு’னு சொல்​வேன்​.

SCROLL FOR NEXT