தமிழ் சினிமா

“ஜி.டி.நாயுடு வாழ்வை இந்தியா அறிய வேண்டும்” - புகழ்கிறார் ஆர்.மாதவன்

நிலா

இந்​தி​யா​வின் சிறந்த கண்​டு​பிடிப்​பாள​ரும் தொழில்​துறை முன்னோடி​யு​மான கோபால​சாமி துரை​சாமி நாயுடு என்ற ஜி.டி.​நா​யுடு​வின் வாழ்க்​கைக் கதை, ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்பட​மாக உரு​வாகி இருக்​கிறது. ‘இந்​தி​யா​வின் எடிசன்’ என்று அழைக்​கப்​படும் ஜி.டி.​நா​யுடு​வாக மாதவன் நடித்​துள்​ளார்.

சத்​ய​ ராஜ், ஜெய ​ராம், பிரி​யா மணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். கிருஷ்ண குமார் ராம்​ கு​மார் எழுதி இயக்​கி​யுள்​ளார். வர்​கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்​கீஸ் மூலன் மற்​றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்​பில் ஆர்​.​மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்​படத்​தின் டிரெய்​லர், கோயம்புத்​தூரில் உள்ள கரி மோட்​டார் ஸ்பீட்​வே​யில் வெளி​யிடப்பட்​டது. படக் குழுவினர் கலந்​து​கொண்​டனர்.

ஆர்​.​மாதவன் கூறும்​போது, ”ஜி.டி.​நா​யுடு, கண்​டு​பிடிப்​பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மேதை. அசா​தாரண சாதனை​யாளர். அவர் பன்​முகத் திறமை​களைக் கொண்​ட​வ​ராக விளங்​கி​னார். பல துறை​களில் அவரது பங்​களிப்பு அளப்​பரியது.

ஆனால், அவரது ஆட்​டோமொபைல் மீதான பேரார்​வத்தை மட்டுமே நாம் கொண்​டாடு​கிறோம். அவரது வாழ்க்கை தமிழ்​நாடு மட்​டுமல்ல, இந்​தியா முழு​வதும் அறியப்பட வேண்​டியது அவசியம். அதுவே இந்த திரைப்​படத்தை உரு​வாக்க எங்​களுக்​கு ஊக்​க​மாக அமைந்​தது” என்​றார்​.

SCROLL FOR NEXT