சென்னை: ராஜாஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம் அடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இன்று (மே 5) நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.
ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர்.
கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.