நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, நாக் அஸ்வின் இயக்கிய படம், ‘நடிகையர் திலகம்’. சாவித்திரியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவான இப்படம் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காகக் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 8 வருடம் ஆனது.
இதையடுத்து அவர் கூறும்போது, “என் மனதுக்கு நெருக்கமான படம் என்றால் நிச்சயமாக ‘நடிகையர் திலகம்’ படமாகத்தான் இருக்கும். அது மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம். அந்த வேடத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. உணர்வுப்பூர்வமாகவும் மனதளவிலும் முழுமையாக என்னை அதில் அர்ப்பணித்தேன். ஒரு கட்டத்தில், ஆழமாக அக்கதாபாத்திரத்தில் மூழ்கி, என்னையே அதில் தொலைத்துவிட்டேன்” என்றார்.