தமிழ் சினிமா

‘வடம்’ படத்​தில் 5 கதைகள் இருக்கும்: நடிகர் விமல் தகவல்

ப்ரியா

விமல் நடிக்​கும் ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரிக்​கும் இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்​து ​மதி மணி​கண்​டன்​, ஷரவண சக்​தி, மூர்த்தி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

மஞ்சு விரட்​டுப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்கு டி.இமான் இசையமைத்​துள்​ளார். பிரசன்னா எஸ்​. கு​மார் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். மார்ச் 6ல் வெளி​யாகும் இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

          

நடிகர் விமல் பேசும்​போது, “இயக்​குநர் கேந்​திரன் இந்​தக் கதையை என்​னிடம் சொன்​ன​போது, சொன்​னபடியே எடுத்து விடுவா​ரா ? என்ற சந்​தேகம் இருந்​தது. இது கமர்​ஷியல் படம்தான். ஆனால், கதை உள்ள கமர்​ஷியல் படம். அது​வும் 4, 5 கதைகள் இருக்​கும் படம். முதலில் இருந்து எல்​லா​வற்​றை​யும் சொல்லி கிளை​மாக்​ஸ்​சில் அனைத்​தை​யும் கச்​சித​மாக முடிப்​பார்.

படப்​பிடிப்​பில் நிறைய காட்​சிகளைப் படமாக்​கிக் கொண்டு இருந்தார். ஆனாலும் எனக்கு நம்​பிக்​கையே வரவில்​லை. படம் பார்த்த பிறகு தான் எனக்​குத் திருப்​தி​யானது. அவர் என்​னிடம் சொன்ன கதையை கச்​சித​மாகப் படமாக்கி இருக்​கிறார்.

இதில் நானும், நட்டி நடராஜும் சண்​டைக் காட்​சி​யில் நடிக்கும்போது, அவர் எதைப் பற்​றி​யும் கவலைப்​ப​டாதே, அடிக்க வேண்​டும் என்​றால் அடித்து விடு, மிதிக்க வேண்​டும் என்​றால் மிதித்து விடு என சுதந்​திரம் கொடுத்​தார். அதனால் அந்த காட்சி அற்​புத​மாக வந்​தது” என்​றார்.

நட்டி என்ற நடராஜ் கூறும்​போது, “சமூகப் பிரச்​சினை​களைச் சொல்லி ஏராள​மான படங்​கள் வந்​திருக்​கின்​றன. இந்​தப் படம் கிராமத்​தின் கதை. அதைச் சுற்​றி​யுள்ள மக்​களின் மனநிலை, உறவு​ முறை​களை பேசி இருக்​கிறது. தயாரிப்​பாளர் குறிப்பிட்டதை போல் ‘ஏரும் எங்​கள் கடவுள்​தான் எருதும் எங்​கள் கடவுள்​ தான்’ என்​பதை இந்தப் படம் பேசுகிறது” என்​றார்.

SCROLL FOR NEXT