தமிழ் சினிமா

மலையாளத்தில் பேசும் பிரசாத் எனும் நண்பன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 12

Guest Author

சினி​மா​வில் பல கதா​பாத்​திரங்​களில் நான் நடிப்​ப​தற்​கான இன்​ஸ்​பிரேஷ​னாக​வும் நான் மலை​யாளத்​தில் பேசுவதற்கு காரண​மாக​வும் இருந்​தவன் என் நண்​பன் பிர​சாத். பட்டாபி கதா​பாத்​திரத்​துக்​கான காரணகர்த்​தாக்​களில் அவனும் ஒரு​வன். எங்​கள் வீட்​டைத் தாண்டி நான்​கைந்து வீடு​கள் தள்ளி அடுத்த வீட்​டில் வசித்து வந்​தான். என் வீட்​டுக்​கும் நண்​பன் கோபி வீட்​டுக்​கும் நடு​வில் இருந்​தது அவன் வீடு.

தாய்​மொழி தமிழ்​தான் என்​றாலும் கேரளா​வில் பிறந்து வளர்ந்​தவன் என்​ப​தால் நானும் அவனும் மலை​யாளத்​தில்​தான் பேசிக் கொள்​வோம். என் மலை​யாளப் பேச்சு சிறப்​பாக மாறு​வதற்கு அவனிடம் பேசிப் பழகியதே காரணம். என் நண்​பன் கோபி​யும் நானும் எந்த அளவுக்கு ஒன்​றாக சுற்​றினோமோ, அந்​தளவுக்​குப் பிர​சாத்​தும் என்​னுடன் ஒன்​றாக சுற்​று​வான்.

அவனுடைய அப்பா பத்​ம​நாபன், மயி​லாப்​பூரில் ஆட்டோ கன்​சல்​டன்​டாக இருந்​தார். அந்த காலத்​தில் செல்​போன் கிடை​யாது என்​ப​தால் ‘லேண்ட்​லைனி’ல் ஃபோன் வந்​தாலோ அல்​லது அவர் யாருக்​காவது பேசி​னாலோ, “பத்​ம​நாபன் ஃபிரம் மைலாப்​பூர்” என்​று​தான் ஆரம்​பிப்​பார்.

அவர் இப்​படிச் சொல்​வதை நானும் அவனும் அவர் அரு​கில் இல்​லாத​போது கேலி செய்து சிரிப்​போம்! பிர​சாத்​தும் நானும் திடீரென்று பாரிஸ் கார்​னர் போவோம். அங்கு டீ குடித்​து​விட்டு எதை​யா​வது பேசிக்​கொண்டு நடந்தே ராயப்​பேட்டை வரு​வோம்.

அடிக்​கடி சினி​மாவுக்கு செல்​வது எங்​கள் வழக்​கம். அன்​றிரவு கமல் அண்​ணா​வின் ‘மூன்​றாம்பிறை’ படம் பார்க்க சத்​யம் தியேட்​டருக்கு குஷி​யாக கிளம்​பினோம்.(ரூ.2.90 தான் ஹை க்ளாஸ். காசில்​லாத காரணத்​தால் நாங்​கள் ரூ. 1.10 டிக்​கெட்​தான்) கோவிந்​தன் என்ற இன்​னொரு பால்​காரர் பற்றி ஏற்​கெனவே சொல்​லி​யிருக்​கிறேன். அவர் ஒரு நாள் இரவு, மது போதை​யில் தள்​ளாடியபடி அவர் வீட்​டுக்கு வெளியே ஒரு குப்​பைத்​தொட்​டி​யில் காலை தூக்கி வைத்து நின்று கொண்​டிருந்​தார்.

அவர் எப்​படி என்​றால், ஒரு சர்​பத் கிளாஸில் அரை கிளாஸுக்கு சாரா​யத்தை ஊற்றி வைத்​திருப்​பார். அரு​கில் கோலி சோடா இருக்​கும். அதைத் திறந்து வைத்​திருப்​பார். கேஸ் வெளியே போய் வெறும் தண்​ணீ​ராகத்​தான் அது இருக்​கும். யாராவது அவரை தாண்டி சென்​றால், “ஏய் எங்க போய்​னுகிற?” என்று கேட்​பார். “கடைக்கு போறேன் நைனா” என்று சொன்​னால் பின்​னால் திரும்பி அந்த மது கிளாஸை பார்த்​து​விட்​டு, “ஒண்​ணி​யும் இல்​ல.. நீ போ” என்​பார். யார் போனாலும் அதையே​தான் செய்​வார்.

பிறகு கோலி சோடா​வில் கொஞ்​சம் குடித்​து​விட்​டு, அந்த சோடா பாட்​டிலுக்​குள் மதுவை ஊற்​று​வார். ரோட்டை பார்த்​த​வாறு நின்று குடிப்​பார். “ஏன் இப்​படி பண்ற நைனா?” என்று கேட்​டால், “நாம குடிக்​கிறோம்னு யாருக்​கும் தெரியக்​கூ​டாது​டா” என்​பார். கேட்​பவர்​கள் சிரிப்​

பார்​கள். ஐம்​பது மில்லி குடித்து விட்டு அவர் பண்​ணுகிற அலப்​பறை தாங்க முடி​யாது. இப்​போதும் அவர் போதை​யில் நின்​ற​தால் பிர​சாத்​திடம், “டேய், கோவிந்​தன் நைனா தண்ணி போட்​டுட்டு நிற்​கிறாரு. அந்​தப் பக்​கம் பார்க்​காம, சத்​தம் போடாம வா. பிடிச்​சுட்​டாருன்னா தொந்​தர​வாகி போவும்” என்று பிர​சாத்​திடம் சொன்​னேன். சரி என்று அமை​தி​யாக வந்​தான்.

அப்​போது எதிரில் அந்​தப் படத்தை பார்த்​து​விட்டு தெருக்​கார பையன் ஒரு​வன் வந்​தான். அவனைக் கண்​டதும் உற்​சாகத்​தில் இவர் நிற்​பதை மறந்து விட்டு பிர​சாத், “படம் எப்​படி?” என்று அவனிடம் சத்​த​மாக கேட்டு விட்​டான். அவனும், “சூப்​பர்​டா...” என்​றார். “யார் டைரக் ஷன்?” என்று இவன் கேட்​டதும், “பாலுமகேந்​தி​ரா” என்​றான் அந்த பையன். போதையி​லிருந்த கோவிந்​தன் நைனா இதைக்​கேட்​டதும், “இவன் என்ன பெரி​யாளா, அவன் என்ன பெரி​யாளா? நான் யாருக்​கும் பயப்பட மாட்​டேன்​... பாலு மகேந்​தி​ரா?” என்று கத்த ஆரம்​பித்​தார்.

பிறகு தொடர்ந்​து, “நான் அப்​படி இருந்​தேன், இப்​படி இருந்​தேன், பாலு மகேந்​தி​ரா” என்​றார். எதை​யா​வது சொல்​லி​விட்டு அந்த வார்த்​தையை முடிக்​கும்​போது, “பாலு மகேந்​தி​ரா” என்று சொல்​லிக்​கொண்​டிருந்​தார். ஏன் அப்​படி சொன்​னார் என்று இன்று வரை எனக்கு புரிய​வில்​லை. பிறகு அவர் கவனிப்​ப​தற்​குள் நாங்​கள் தாண்டி வந்​து​விட்​டோம்.

“உன்னை பேசாம வான்​னு​தானே சொன்​னேன். யாரு டைரக்​டரா இருந்தா உனக்​கென்​ன?” என்று கேட்​டேன். “யாருன்னு தெரிஞ்​சுக்​கிறதுல என்​னடே தப்​பு?” என்​றான் அவன். பிறகு படம் பார்த்து விட்டு நள்​ளிரவு வீட்​டுக்கு திரும்​பினோம். (நடந்​தே​தான்​..) அவனுடைய வீட்டை ஒட்டி ஒரு சந்து உண்​டு. அதற்​குள்​தான் கோவிந்​தன் நைனா வீடு.

இவன் வீட்​டுக்கு போகும் போது அப்​போதும் அவர் ஓரத்​தில் நின்று எதையோ உளறியபடி கடைசி​யில், “பாலு மகேந்​தி​ரா, பாலு மகேந்​தி​ரா” என்று சொல்​லிக் கொண்​டிருந்​தார். நான் அவனிடம், “இன்​னைக்கு நீ சிக்​குன​டா” என்று சொல்லி விட்டு என் வீட்​டுக்கு சென்று விட்​டேன்.

மறு​நாள் காலை​யில், என் வீட்​டுக்கு கீழே நின்​று, “டே பாஸ்​கர், டே பாஸ்​கர்​...” என்று கத்​திக் கொண்​டிருந்​தான். நான் தூக்​கக் கலக்​கத்​தில் மாடியி​லிருந்து எட்​டிப் பார்த்​து, “என்​ன​டா?” என்​றேன். “கீழ வாடே” என்​றான். இறங்கி வந்து என்​ன​டா? என்​றேன். “இனிமே உங்​கூட சினி​மாவுக்கு வரக்​கூ​டாதுடே..” என்​றான். ஏன்? என்று கேட்​டேன். “நைட்டு போயிட்டே இருந்​தேன். எங்க வீட்​டுக் கதவை தட்​டினதும், கோவிந்​தன் “திருடன் திருடன்​“னு கத்​திட்​டாரு​டா.

எல்லா வீட்​டுல​யும் லைட்டை போட ஆரம்​பிச்​சுட்​டாங்க. நான் பயந்து அவர் வீட்டு சந்து வழியா ஓடிப்​போயி எங்க வீட்டு பின்​பக்​கச்​சுவர்ல ஏறி குதிக்க நினைச்​சேன். சுவர் உயரமா இருந்​த​தால முடியல. ஒரு இடத்​துல கீழே கருப்​பா, மேடை மாதிரி இருந்​துச்​சு. நான் அது மேல ஏறி சுவர்ல கால் வச்​சேன் பாரு, அது எரு​மை​மாடுன்னு அப்​புறம்​தான் தெரிஞ்​சுது. டமார்னு அது எழுந்​துப்​புடுத்​துடே... நான் அப்​படியே என் வீட்​டுக்​குள்ள பொத்​துன்னு குப்​புற விழுந்​துட்​டேன். கை, கால்ல அடி. இங்க பாருடா கை, காலு வீங்​கிருக்​கு” என்று காண்​பித்​தான். இரு​வரும் விலா நோக சிரித்​தோம்.

பிறகு நான் போரூருக்கு குடிபெயர்ந்து விட்​டேன். தீவிர​மான ஐயப்ப பக்​த​னான அவனை சந்​திக்க முடிய​வில்​லை. அவனும் எங்கோ சென்று விட்​டான். இப்​போது போனில் தொடர்​பில் இருக்​கிறான். நாமக்​கல்​லில் உள்ள கோயில் ஒன்​றில் அர்ச்​சக​ராக இருக்​கிறான். நீண்ட காலத்​துக்கு பிறகு,

சமீபத்​தில் அவனைச் சந்​தித்து பழங்​கதை பேசி, சிரித்து மகிழ்ந்​து​விட்டு வந்​தேன்.

இப்​படி நானும், அவனும், கோபி​யும் சென்​னை​யில் சுற்​றாத இடமில்​லை. பார்க்​காத திரைப்​படங்​கள் இல்​லை. அதெல்​லாம் இப்​போது மலரும் நினை​வு​களாக இருக்​கின்​றன. எப்​போ​தாவது தனி​யாக அமர்ந்​தால் எங்​கள் சிறு​வயது சேட்​டைகளும் ஜாலி​யாக அடித்த அரட்​டைகளும் மனதுக்​குள் நீந்​திக்​கொண்​டிருக்​கும். என் மலை​யாளப் பேச்​சுக்கு பலர் பேர் காரணம் என்​றாலும்​ இவனும்​ ஒரு காரண​மாக இருந்​தான்​. சில படங்​களில்​ இவனுடைய ஸ்டைலை​யும்​ மேனரிசத்​தை​யும்​ பயன்​படுத்​தி இருக்​கிறேன்​.

( திங்கள்தோறும் பேசுவோம் )

SCROLL FOR NEXT