கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீட்டை அடுத்த ஆண்டு ஒத்திவைத்துவிட்டது படக்குழு.
டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘வா வாத்தியார்’. அப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. டிசம்பர் 12-ம் வெளியீடுக்கு திட்டமிட்டப்பட்டு, பின்பு டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டது.
தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் டிசம்பர் 24-ம் தேதி வெளியீட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது கோடை விடுமுறைக்கு ‘வா வாத்தியார்’ படத்தினை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்குள் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து விரைவில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.