தமிழ் சினிமா

‘அருள்வான்’ படத்தில் ​மாவட்ட ஆட்சி​யராக அருள்​நிதி

நிலா

கணேஷ் விநாயகன் இயக்​கி​யுள்ள ‘அருள்​வான்​’ படத்​தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்​கட், ரம்யா பாண்​டியன், விடிவி கணேஷ், ஜான் விஜய், பேபி கிருத்​திகா உள்​ளிட்ட பலர் நடித்திருக்கிறார்​கள். எம்.சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்தப் ​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் குமார் இசையமைத்​துள்​ளார்.

வரும் 17ம் தேதி வெளி​யாகும் இப்​படத்தை 90 பிக்​சர்ஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் எஸ்​.ஜி சரவணன் தயாரித்​துள்​ளார். சக்தி பிலிம் ஃபேக்​டரி சக்​தி வேலன் வழங்​கு​கிறார். இப்​படத்​தின் செய்தியாளர்கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக் குழுவினருடன் இணை தயாரிப்​பாளர் சுபா சரவணன், இணை தயாரிப்​பாளர்​கள் சரண், சரத் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

நடிகர் அருள்​நிதி கூறும்​போது, “இந்​தப் படத்​தின் கதையை இயக்குநர் சொல்​லி​விட்​டு, 5 நாட்​கள் கால்​ஷீட் போதும் என்​றார். பிறகு படப்​பிடிப்பு தளத்​துக்​குச் சென்​றவுடன் 5 நாள் என்​பது 10 நாளாக​வும் பிறகு 15 நாளாக​வும் பின் 20 நாளாக​வும் சென்​றது. இப்​படத்​தின் கதையைக் கேட்ட பிறகு நான் முழு நீள படத்​தில் நடித்திருந்​தா​லும் இது போன்​றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்​னால் ஏற்று நடித்​திருக்க முடி​யு​மா ? எனத் தெரி​யாது.

இந்​தப் படத்​தில் முத்​து ​வேல் என்ற மாவட்ட ஆட்​சி​யர் கதாபாத்திரத்​தில் நடித்​திருக்​கிறேன். இது குழந்​தைகளுக்​கான கல்​வி​யின் அவசி​யம் குறித்து பேசி​யிருக்​கும் படம். அனைவருக்கும் பிடிக்​கும் என்று நம்​பு​கிறேன்​” என்​றார்​.

SCROLL FOR NEXT