தமிழில் ‘ரா ரா’, ‘சந்தாமாமா’ ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள இவர், இப்போது பாலிவுட் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
அவர் கூறும்போது, “நான் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறேன். எனது பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்புடன் இருக்கிறேன். எனக்கு பத்து கதைகள் வந்தால், 9 கதைகள் நன்றாக இல்லை என்றால் அதை வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன். வாய்ப்பே இல்லாமல் 6 மாதங்கள் வீட்டில் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை. நல்ல கதைகளுக்காக காத்திருப்பேன்.
நான் எந்தப் படத்தை, கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தாலும் அது நான் பார்க்க விரும்பும் ஒன்றாக இருப்பதுமுக்கியம். எனக்கு பரிசோதனை முயற்சியான கதைகளும் வருகின்றன.
பார்வையாளர்கள் அனைத்துவித ஜானர்படங்களையும் பார்க்கிறார்கள். அதே போல நடிகர்களுக்கும் விதவிதமான வகைகளில் தங்களை வெளிப்படுத்த இது சிறந்த நேரம். நான் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறேன்” என்றார்