தென்னிந்திய சினிமா

“நடிகர் பிருத்​வி​ராஜை குறிவைத்து தாக்​கு​கிறார்​கள்” - மல்​லிகா சுகுமாரன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பிருத்​வி​ராஜ், ஷம்மி தில​கன் நடித்​துள்ள ‘வி​லா​யத் புத்​தா’ திரைப்படம் நவ.21-ம் தேதி வெளி​யானது. ஜி.ஆர்​.இந்து கோபன் எழு​திய நாவலின் அடிப்​படை​யில் உரு​வாக்​கப் பட்ட இப்படத்துக்குக் கலவை​யான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. பிருத்வி​ராஜை குறை கூறி சமூகவலை​தளங்​களில் பலர் விமர்சித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் தனது மகனைக் குறிவைத்து சைபர் தாக்​குதல் நடக்கிறது என்று அவருடைய தாயாரும் மூத்த நடிகை​யு​மான மல்​லிகா சுகு​மாரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “சிலர் வேண்​டுமென்றே பிருத்​வி​ராஜின் நற்​பெயருக்​குக் களங்​கம் விளைவிக்க முயற்​சிக்​கின்​றனர். திரைத்​துறை​யில் உள்ள சிலர் இதற்​குப் பின்​னணி​யில் உள்​ளனர். சில சமூக ஊடக கணக்​கு​களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரு​கின்​றனர். மலை​யாளத் திரை​யுல​கில் உள்ள எந்த சங்கமும் இது​வரை எனது மகனுக்கு ஆதர​வாகப் பேச​வில்​லை.

நடிகர் தில​க​னின் மகன் ஷம்மி தில​கன் பிரபலமடைந்து வரு​வ​தால் சிலர் அவருக்கு எதி​ராகக் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர். இது​போன்ற எதிர்​மறை​யான கருத்​துக்​கள் ஒரு​வரின் கடின உழைப்​பைக் குறைத்து மதிப்​பிட வைக்​கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்​கிடையே இப்​படத்​தை​யும் அதில் நடித்​துள்​ளவர்​களை​யும் அவதூறு செய்​யும் நோக்​கில் சில யூடியூப் சேனல்​கள் வெறுப்பு பிரச்​சா​ரம் செய்​து ​வரு​வ​தாக, படத்​தின் தயாரிப்பாளர் சந்தீப்சேனன் சைபர்​கிரைம் போலீ​ஸில் புகார் செய்​துள்​ளார்.

SCROLL FOR NEXT