தென்னிந்திய சினிமா

ரசிகர்​களுக்கு ஸ்ரீலீலா வேண்டுகோள்

செய்திப்பிரிவு

திரை​யுல​கினருக்​குச் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பம் (ஏ.ஐ) பெரும் சவாலாக விளங்கி வரு​கிறது. குறிப்பாக நடிகைகளின் ஆபாச புகைப் படங்​களை​யும் வீடியோக்​களை​யும் உரு​வாக்கி வெளி​யிடு​வது அதி​கரித்து வரு​கிறது.

ராஷ்மிகா மந்​த​னா, மிருணாள் தாக்​குர், பிரி​யங்கா மோகன் உள்பட பலர் இதை எதிர்​கொண்​டனர். இப்​போது நடிகை ஸ்ரீலீலாவின் ஏ.ஐ புகைப்​படங்​களும் வெளி​யாகி அவரை அதிர்ச்சியடைய வைத்​துள்​ளன. இந்​நிலை​யில், ஏ.ஐ. மூலம் உருவாக்​கப்​படும் அபத்​தங்​களைப் பரப்ப வேண்​டாம் என நடிகை ஸ்ரீலீலா வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஏ.ஐ. மூலம் உரு​வாக்​கப்படும் அபத்​தங்​களைப் பரப்ப வேண்​டாம் என ஒவ்​வொரு சமூக ஊடக பயனரிட​மும் கை கூப்​பிக் கேட்​டுக்​கொள்​கிறேன். தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​து​வதற்​கும் துஷ்பிரயோகம் செய்​வதற்​கும் வித்​தி​யாசம் இருக்​கிறது. தொழில்நுட்​பத்​தால் ஏற்​படும் முன்​னேற்​றங்​கள் வாழ்க்​கையை எளிமைப்​படுத்​து​வதற்​காகத்​தான். மாறாக அதைச் சிக்​கலாக்​கு​வதற்​காக இல்​லை.

ஒவ்​வொரு பெண்​ணும், அவள் கலைத்​துறையைத் தேர்ந்​தெடுத்​தா​லும் கூட, ஒரு​வரின் மகள், பேத்​தி, சகோ​தரி, தோழி அல்​லது சக ஊழியர்​தான். நாம் பாது​காக்​கப்​பட்ட சூழலில் இருக்​கிறோம் என்ற நம்​பிக்​கை​யுடன் இருக்​கவே விரும்​பு​கிறோம்.

என் சக நடிகர்​களும் இந்​தப் பிரச்​சினை​களை எதிர்​கொள்​கின்​றனர். அவர்களின் சார்​பாக​வும் அதைப் பரப்ப வேண்​டாம் என்று கேட்டுக்​கொள்​கிறேன். அடுத்​தகட்ட நடவடிக்​கையை அதிகாரிகள் பார்த்​துக்​ கொள்​வார்​கள்” என்று கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT