தென்னிந்திய சினிமா

“தவறாக ஒரு ரயி​லில் ஏறிவிட்டால்..!” - விவாகரத்து பற்றி ஹன்​சிகா கருத்து

நிலா

நடிகை ஹன்​சிகா கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்​டாரியா என்ற தொழில​திபரைக் காதலித்து திரு​மணம் செய்து கொண்டார்.

சோஹைல் ஏற்​கெனவே திரு​மண​மாகி விவாகரத்து ஆனவர். இருவருக்​கும் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்​டதை அடுத்து 2024-ம்ஆண்டு முதல் இரு​வரும் பிரிந்து வாழ்ந்​தனர். பின்​னர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்​தனர். கடந்த மார்ச் மாதம் நீதி​மன்​றம் அவர்​களுக்கு விவாகரத்து வழங்​கியது. இந்​நிலை​யில் ஹன்சிகா அளித்​துள்ள பேட்​டி​யில், விவாகரத்​தால் எனக்கு எந்த வருத்​த​மும் இல்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “தவறு​தலாக ஒரு ரயி​லில் ஏறி​விட்டால், அதிலிருந்து இறங்​கி விடு​வது​தான் சிறந்​தது. என் குடும்​பத்​தினர் எனக்கு ஆதர​வளித்​தனர். இப்​போது இருக்​கும் நிலை​யில் மகிழ்ச்​சி​யாகவே இருக்​கிறேன். என் தாயும் சகோ​தரரும் என்​னிடம், ‘உனக்கு எது​வும் சவு​கரிய​மாக இல்லை என்​றால் அதைத் தொடர வேண்​டாம்’ என்று சொன்​னார்​கள். நான் மிக​வும் இருண்ட மனநிலை​யில் இருந்​ததை அவர்​கள் கண்​டார்​கள். இயல்​பாகவே நான் மகிழ்ச்​சி​யான, கலகலப்​பான நபர்.

அப்​படிப்​பட்ட நான், அந்த மனநிலை​யில் இருந்​தது அவர்​களுக்கு அதிர்ச்​சி​யளிப்​ப​தாக இருந்​தது. அதனால், ‘நீ என்ன முடிவு எடுத்​தா​லும் துணை நிற்​போம்’ என்​றார்​கள். இன்​று​வரை, எங்​கள் இரு​வருக்​கும் இடை​யில் உண்​மை​யில் என்ன நடந்​தது என்​பது வேறு யாருக்​கும் தெரி​யாது; இரண்டு நபர்​களுக்கு இடை​யில் நடக்​கும் விஷ​யங்​கள் பற்றி வேறொரு நபரிடம் சொல்​வதற்​கோ, கருத்​துத் தெரி​விப்​ப​தற்கோ எது​வுமே இல்​லை” என்று கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT