பாலிவுட்

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” - கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

நிலா

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார். ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்​துப் புகழ்​பெற்ற இவர், துபாய் தொழில​திபர் சுராஜ் நம்பியார் என்​பவரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இந்​நிலை​யில் சில நாட்​களுக்கு முன் மவுனி ராய், தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் சுராஜ் நம்பியார் புகைப்​படங்​களை நீக்​கி​னார்.

இதனால் இரு​வரும் பிரிவ​தாகச் செய்​தி​கள் வெளி​யானது. இந்​நிலை​யில் தாங்​கள் பிரிவதை மவுனி ராயும் சுராஜ் நம்​பி​யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளனர். அவர்​கள் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நாங்​கள் பிரிந்து செல்ல முடிவு செய்​துள்​ளோம். இந்த விஷ​யங்​களைத் தனிப்​பட்ட முறை​யிலும் சுமுக​மாக​வும் கையாள்​வதற்​குக் கூடு​தல் கால அவகாசம் எடுத்​துக்​கொள்​கிறோம் என்​ப​தைத் தெளிவுபடுத்த விரும்​பு​கிறோம்.

எங்​களைப் பற்​றிய கற்​பனை​யான கதைகள் மற்​றும் அப்பட்டமான பொய்​களைப் பரப்​புவதன் மூலம் எங்​களது தனிப்பட்ட வாழ்க்​கை​யைப் பரபரப்​பாக்க முயற்​சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிந்​தனைக்​குப் பிறகே பரஸ்பர மரி​யாதை மற்​றும் புரிதலுடன் தனித்​தனி பாதைகளில் முன்​னோக்​கிச் செல்ல முடி​வெடுத்​துள்​ளோம். வரும் காலங்களிலும் எங்​களது நட்​பைப் போற்​று​வதற்கு முயற்சிப்போம். உங்​களது புரிதலுக்​கும், எங்​களது தனிப்​பட்ட சுதந்​திரத்​துக்கு நீங்​கள் அளிக்​கும் மரி​யாதைக்​கும் நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT