நடிகை ரகுல் ப்ரீத் சிங்

 
பாலிவுட்

‘ரா​மாயணம்’ வெறும் சினிமா அல்ல: ரகுல் ப்ரீத் சிங் பெருமிதம்

நிலா

நிதேஷ் திவாரி இயக்​கி​யுள்ள ‘ரா​மாயணம்’ படத்​தில் ரன்​பீர் கபூர் ராம​னாக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும், யாஷ் ராவண​னாக​வும் நடித்​துள்​ளனர்.

இதில் சூர்ப்​பணகை கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள ரகுல் ப்ரீத் சிங்​, “இது வெறும் சினிமா அல்ல, அதை​விட பெரிய அனுபவம்” என்று கூறி​யுள்​ளார்.

அவர் மேலும் கூறும்​போது, “​ரா​மாயணம் போன்ற படத்​தில் ஒரு பகுதியாக இருப்​பது பெரு​மை. இது திரைப்​ படத்​தைத் தாண்​டிய பயணம். நம் பாரம்​பரி​யம், கலாச்​சா​ரம் மற்​றும் கதைகளை உலக அரங்​கில் எடுத்​துச் செல்​லும் வாய்ப்பு இது.

இப்​படம் மூலம் உலக அரங்​கில் நம் நாட்​டைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​துகிறோம். அந்த உணர்வை வார்த்​தைகளால் விவரிக்க முடியாது. நீங்​கள் எங்​களு​டன் சேர்ந்து இந்த ராமாயண உலகுக்குள் நுழை​யும் தருணத்​தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT