பாலிவுட்

அ​தி​கரிக்​கும் இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வசூல்: முதல் அரையாண்டில் ரூ.6,400 கோடியை அள்ளியது!

நிலா

இந்​தாண்​டின் முதல் 6 மாதங்​களில் இந்​திய திரைப் படங்​களின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.6,398 கோடியை எட்​டி​யுள்​ளது.

கரோனா பொது முடக்​கத்​துக்​குப் பிறகு இந்​திய திரைப்​படங்களின் வசூல் கடந்த சில வருடங்​களாக அதி​கரித்து வருகிறது. இந்த 2026-ம் வருடத்​தின் முதல் அரை​யாண்​டில் எப்போதும் இல்​லாத அளவுக்கு இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் அதிகரித்​துள்​ளது. ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை ரூ.6,398 கோடி வசூலை இந்​திய சினிமா எட்​டி​யுள்​ளது.

இது, 2025ம் ஆண்​டின் இதே கால​கட்​டத்​தில் வசூலித்​ததை விட சுமார் ரூ.650 கோடி அதி​கம். கரோ​னா​வுக்​குப் பிறகு முதல் அரையாண்​டில் கிடைத்​துள்ள அதி​கபட்ச வசூல் இது. இந்​தக் கணக்​கில் வெளி​நாட்டு வசூல் விவரங்​கள் சேர்க்​கப்படவில்​லை. இந்த வசூலுக்கு இந்தி திரைப்படங்​களான ‘துரந்​தர் 2’ (ரூ.1,277 கோடி), ‘பார்​டர் 2’ (ரூ.379 கோடி), தெலுங்கு படங்​களான ‘மன சங்கர வர பிர​சாத் காரு’ (ரூ.255 கோடி), பெத்தி (ரூ.232 கோடி), தமிழில் வெளி​யான ‘கருப்​பு’ (ரூ.229 கோடி) உள்​ளிட்ட திரைப் படங்கள் முக்​கிய காரணங்​களாக அமைந்​துள்​ளன.

குறிப்​பாக ‘துரந்​தர் 2’ இந்த ஆண்​டின் மிகப்​பெரிய வசூல் சாதனை படமாக அமைந்​தது. முதல் அரை​யாண்​டின் மொத்த இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சுமார் 20 சதவி​கிதத்தை இப்​படம் மட்​டுமே வழங்​கி​யுள்​ளது. அதிக வசூல் செய்த முதல் 15 படங்​கள், மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 58 சதவி​கிதத்​தைப் பெற்​றுள்​ளன. 2025ம் ஆண்​டின் முதல் அரை​யாண்​டில் இந்​தப் பங்கு 49 சதவி​கிதம் மட்டுமே இருந்​தது. இந்​தக் கால​கட்​டத்​தில், திரையரங்​கு​களுக்கு வந்த பார்​வை​யாளர்களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்​துள்​ளது.

2025-ம் ஆண்​டின் முதல் அரை​யாண்​டில் 36.2 கோடி​யாக இருந்த பார்​வை​யாளர் வரு​கை, 2026-ம் ஆண்​டின் முதல் அரை​யாண்​டில் 37.8 கோடி​யாக உயர்ந்​து, 5 சதவி​கித வளர்ச்​சியை பதிவு செய்துள்ளது. இதன்​மூலம், தொடர்ந்து 3 ஆண்​டு​களாக நீடித்த சரிவு மற்​றும் தேக்​கநிலைக்கு முடிவு ஏற்​பட்​டுள்​ளது. இருந்​தா​லும், 2022-ம் ஆண்​டின் முதல் அரை​யாண்​டில் ‘கே.ஜி.எஃப்: சாப்​டர் 2’, ‘ஆர்​ஆர்​ஆர்’ வெளி​யான​போது பதி​வான 40 கோடி பார்வையாளர்கள் என்ற சாதனையை இன்​னும் எட்​ட​வில்​லை.

திரையரங்​கு​களுக்கு பார்​வை​யாளர்​கள் அதிக அளவில் மீண்​டும் வரத் தொடங்​கி​யிருப்​பதும், பெரிய படங்​களு​டன் நடுத்தர பட்ஜெட் படங்​களும் நல்ல வரவேற்​பைப் பெற்​றிருப்​பதும் இந்​திய பாக்ஸ் ஆபிஸ் மீண்​டும் ஆரோக்​கிய​மான பாதை​யில் செல்ல காரண​மாகி இருக்​கிறது. முதல் அரை​யாண்டை போல 2-ம் பாதியிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று திரை​யுல​கினர் நம்பிக்​கைத் தெரி​வித்​துள்​ளனர். அப்​படித் தொடர்ந்​தால் இந்த ஆண்​டின் மொத்த இந்​திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்​டும் என்​கிறார்​கள்.

அது நடந்​தால், ரூ.13,395 கோடி என்ற கடந்த ஆண்​டின் வசூல் சாதனை முறியடிக்​கப்​படும். இந்த வருடத்​தின் 2ம் பாதி​யில் எதிர்பார்க்​கப்​படும் படங்​களாக, ‘ரா​மாயணம்: பகுதி 1’, ஷாருக்கானின் ‘கிங்’, யாஷின் ‘டாக்​ஸிக்’, பிர​பாஸின் ‘ஃபவுஸி’, ரஜினி​யின் ‘ஜெயிலர் 2’, விஜ​ய்யின் ‘ஜன​நாயகன்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்​தப் படங்​கள் வெற்றி பெற்​றால், 2026ம் ஆண்​டில் திரையரங்குகளில் திரைப்​படங்​களைப் பார்த்த மொத்த பார்வையாளர்​களின் எண்​ணிக்கை 100 கோடியை தாண்​டும் என்று கூறப்​படு​கிறது. கரோ​னா கால​கட்​டத்​துக்​குப்​ பிறகு இதுவரை எந்​த ஆண்​டும்​ அந்​த இலக்​கை எட்​ட​வில்​லை.

SCROLL FOR NEXT