கோப்புப் படம்

 
பாலிவுட்

ஒட்டுமொத்தத் திரையுலக​மும் முடங்கும்: திரைப்பட கூட்டமைப்பு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பாலிவுட்​டில் கேம​ரா​வுக்கு பின்​னால் வேலை செய்​யும் தொழிலா​ளர்​களின் நிலை​மை​களைச் சீரமைக்​க​வில்லை என்​றால் ஒட்​டுமொத்​தத் திரை​யுல​க​மும் முடங்​கும் என மேற்​கிந்​திய திரைப்பட தொழிலா​ளர்​களின் கூட்​டமைப்​பின் தலை​வர் பி.என்​.​தி​வாரி எச்​சரித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “குறைந்த வேலை​வாய்ப்​பு​கள், ஊதி​யம் தாமத​மாவது, அதி​க​மான வேலை நேரம் போன்​றவற்​றால் திரைப்பட தொழிலா​ளர்​கள் பெரும் பாதிப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றனர். தற்​போது பல ஓடிடி தளங்​கள் வந்​து​விட்​டன, தரத்​துக்கு முக்​கி​யத்​து​வம் தராமல் வெறும் எண்​ணிக்​கையை மட்​டுமே பலரும் எதிர்​பார்க்​கிறார்​கள். இதனால் லைட் மேன், கலை இயக்​குநர்​கள், துணை நடிகர்​கள் உள்பட தினசரி ஊதி​யம் வாங்​கும் திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறார்​கள்.

சில நேரங்​களில் 20 மணி நேரம் வரை வேலை வாங்​கு​கிறார்​கள். ஆனால், அவர்​களுக்கு 8 மணி நேரத்​துக்​கான ஊதி​யம் கூட சரி​யாக வழங்​கப்​படு​வ​தில்​லை. ஓடிடி நிறு​வனங்​கள் மற்​றும் பெரிய நிறு​வனங்​களின் படங்​களில் பணி​யாற்​று​பவர்​களுக்கு மாதக்​கணக்​கில் ஊதி​யம் தாமத​மாகிறது. இந்​நிலை தொடர்ந்​தால், ஒட்​டுமொத்​தத் திரைப்​படத் துறை​யும் ஒரு நாள் முடங்​கும். தொழிலா​ளர்​கள் வீதிக்கு வந்து போராடு​வார்​கள்” என்று எச்​சரித்​துள்ள திவாரி, அவர்​களுக்கு நீதி கிடைக்​கத் தங்​களது கூட்​டமைப்பு தொடர்ந்து முயன்று வரு​வ​தாகக் கூறி​னார்.

SCROLL FOR NEXT