நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி இருக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்துள்ளனர்.
அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே என பலர் நடித்துள்ளனர். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது. இதன் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தீபாவளிக்கு முன்பாக அக்.30-ல் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.