பாலிவுட்

“புற்றுநோய் என தெரிந்த அந்த நாள் இரவு...” - சிகிச்சையில் இருந்து மீண்ட மனிஷா கொய்ராலா உருக்கம்

நிலா

புதுடெல்லி: ‘நான் இறந்​து​விடு​வேன் என உணர்ந்​தேன்’ என புற்​று​நோய் கண்​டறியப்​பட்ட தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்​க​மாக பேசி​யுள்​ளார்.

இந்​தி​யத் திரை​யுல​கில் 1990-களில் முன்​னணி நடிகை​யாக வலம் வந்​தவர் மனிஷா கொய்​ராலா. திரைத்​துறை​யில் மட்​டுமல்​லாமல், தனது தனிப்​பட்ட வாழ்க்​கை​யில் புற்​று​நோய் பாதிப்​பிலிருந்து மீண்டு வந்​து, பலருக்கு ஊக்​கமளிக்கும் ஒரு தன்​னம்​பிக்கை நாயகி​யாக​வும் திகழ்​கிறார்.

2012-ல், மனிஷா கொய்​ராலா​வுக்கு நான்​காம் நிலை கருப்பை புற்று​நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, அவருக்கு 11 மணி நேர அறுவை சிகிச்சை மற்​றும் பல சுற்று கீமோதெரபி உள்​ளிட்ட சிகிச்​சைகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. ஓராண்டு கழித்​து, 2013-ல், அவர் அந்த நோயை வென்​றார். அன்று முதல், தனது குணமடைதல் பயணம் மற்​றும் வாழ்க்கை மீதான புதிய கண்​ணோட்​டம் குறித்து வெளிப்​படை​யாகப் பேசி வருகிறார்.

இந்​நிலை​யில், சமீபத்​தில் பிரபல டிஜிட்​டல் ஊடகத்​துக்கு அளித்த பேட்​டி​யில் மனிஷா கொய்​ராலா கூறும்​போது, “பகலில் எனக்​குப் புற்​று​நோய் இருப்​ப​தாகச் சொன்​னார்​கள். அந்த இரவு, எனக்கு மிக​வும் தனிமை​யான மற்​றும் நீண்ட இரவாக இருந்​தது. அது ஒரு இருண்ட வெளியைப் போல உணர்ந்​தேன். ‘நான் இறந்துவிடுவேன்’ என்று உணர்ந்​தேன்.

எனக்​குப் புற்​று​நோய் வந்​த​போது​தான், ஒரு நோயாளி எவ்​வளவு தனிமை​யாக உணர்​வார் என்​பதை நான் உணர்ந்​தேன். சில நேரங்​களில், தனிமை உங்​களுக்​குப் பழகி​விடும். வாழ்க்கை என்​பது பலவித​மான அடுக்​கு​களின் கலவை, ஆனால் ஒரு கூட்​டத்​தின் மத்​தி​யிலும் தனிமையை உணரு​வது என்​பது விவரிக்க முடி​யாத கொடூரம். அந்​தக் கால​கட்​டம், நான் அனுப​வித்​த​திலேயே மிக​வும் கொடூர​மான மற்​றும் பயங்​கர​மான நேரம்” என்​றார்.

ஜென்ஸி தலை​முறை​யினருக்கு...

சமீபத்​தில் காத்​மாண்​டு​வில் நடை​பெற்ற மாநாட்​டில் மனிஷா கொய்​ராலா, “இளம் தலை​முறை​யினரின் ஆற்​றலை நான் ஆதரிக்​கிறேன். ஊழலுக்கு எதி​ராக​ அவர்​கள் எழுந்து நின்​றதை நான் ஆதரித்து வணங்​கு​கிறேன்” என்​றார். மனிஷா நேபாளத்​தின் அரசியல் முக்​கி​யத்​து​வம் வாய்ந்த கொய்​ராலா குடும்​பத்​தைச் சேர்ந்​தவர் என்​பதும் இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிர​சாத் கொய்ராலா நேபாளத்​தின்​ பிரதம​ராக இருந்​தவர்​ என்​பதும்​ குறிப்பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT