பாலிவுட்

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு - ‘அப்​ரூவர்’ மனுவை வாபஸ் பெற்றார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்​டஸ்

நிலா

பண மோசடி வழக்​கில், அரசு தரப்பு சாட்​சி​யாக மாறக் கோரி தாக்​கல் செய்த மனுவை, பாலிவுட் நடிகை ஜாக்​குலின் பெர்னாண்டஸ் திரும்​பப் பெற்​றார்.

பெங்​களூரு​வைச் சேர்ந்த சுகேஷ் சந்​திரசேகர் என்​பவர், அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் ஆட்​சி​யாளர்​களு​டன் நட்பு இருப்​ப​தாகக் கூறி தொழில​திபர்​கள், அரசி​யல் பிரபலங்​கள் உள்பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்​த​தாக புகார்​கள் எழுந்​தன. இரட்டை இலை சின்​னத்தை மீட்டு தரு​வ​தாகக் கூறி, டிடிவி தினகரன் தரப்புக்​காகத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு லஞ்​சம் கொடுக்க முயன்ற வழக்​கில், சுகேஷ் கைது செய்​யப்​பட்​டார்.

சிறை​யில் இருந்​த​வாறே தொழில​திபர் ஷிவிந்​தர் சிங்​கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்​தது தொடர்​பாக சுகேஷ் சந்​திரசேகர் மீது டெல்லி பொருளா​தா​ரக் குற்றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

இதில் கிடைத்த பணத்​தைக் கொண்டு அவர், நடிகை ஜாக்​குலின் பெர்​னாண்​டஸுக்கு ஏராள​மான, விலை​ உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்​கி​யுள்​ள​தாக அமலாக்​கத்​துறை குற்​றம் சுமத்தி​யது. இதன் காரண​மாக, இந்த பணமோசடி வழக்​கில் ஜாக்குலின் குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​பட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் இவ்​வழக்​கில் அரசு தரப்பு சாட்​சி​யாக மாற, ஜாக்குலின் பெர்​னாண்​டஸ் டெல்லி பாட்​டி​யாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்​தார். அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறு​வதற்கு அமலாக்​கத்​துறை கடும் எதிர்ப்பு தெரிவித்​தது.

அவர் இந்த வழக்​கில் ஒரு பாதிக்​கப்பட்ட நபர் அல்ல, மாறாக குற்றத்​தின் மூலம் கிடைத்த பணத்​தில் பலன்​களை அனுபவித்தவர் என்று அமலாக்​கத்​துறை வாதிட்​டது. அமலாக்கத்துறை​யின் கடும் எதிர்ப்​பைத் தொடர்ந்​து, ஜாக்​குலின் தரப்பு வழக்​கறிஞர் அந்த மனு​வைத் திரும்​பப் பெறு​வதாகத் தெரிவித்​தார். இதை ஏற்​றுக்​கொண்ட நீதிபதி பிர​சாந்த் சர்​மா, மனு​வைத் தள்​ளு​படி செய்​தார்.

SCROLL FOR NEXT