வேலை வாய்ப்பு

தொழில்நுட்ப பணிகள்: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ஊரக வளர்ச்​சித்​துறை பணி மேற்​பார்​வை​யாளர், சாலை ஆய்​வாளர் உள்பட 50 வித​மான பதவி​களில் 839 காலியிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு:

தமிழக அரசின் ஊரக வளர்ச்​சித்​துறை​யில் உள்ள பணி மேற்​பார்​வை​யாளர், இளநிலை வரைதொழில் அலு​வலர், சாலை ஆய்​வாளர் உள்பட 50 வித​மான பதவி​களில் 839 காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்வு (டிப்​ள​மா, ஐடிஐ கல்​வித்​தகுதி பதவி​கள்) அறிவிக்கை வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி ஜூலை 7-ம் தேதி வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​வுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.

SCROLL FOR NEXT