வணிகம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் நெருக்கடி: 4,335 விமான சேவை ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்​களவை​யில் நேற்று நடை​பெற்ற கேள்வி நேரத்​தின் போது, துணைக் கேள்வி ஒன்​றுக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் கே.ராம்​ மோகன் நாயுடு கூறிய​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் ஆகிய நாடு​களுக்​கிடையே தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலால், மத்​திய கிழக்கு ஆசிய வான் ​பரப்பு மூடப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக விமானப் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்கப்பட்டுள்​ளது.

வான் ​பரப்பு மூடப்​பட்​டிருக்​கும் சூழலில், அந்​தப் பகு​தி​யில் விமானங்​களை இயக்​கு​வது பாது​காப்​பான​தாக இருக்​காது. இதுவரை கிடைத்​துள்ள புள்​ளி​ விவரங்​களின்​படி, வான்​ பரப்பு முடக்​கத்​தால் இந்​திய விமான நிறு​வனங்​கள் 4,335 விமான சேவைகளை​யும், வெளி​நாட்டு நிறு​வனங்​கள் 1,187 விமான சேவை​களை​யும் ரத்து செய்​துள்​ளன.

          

மத்​திய விமானப் போக்​கு​வரத்து அமைச்​சகம் மற்​றும் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் ஆகியவை அந்​தந்த நாட்டு விமானப் போக்​கு​வரத்து ஒழுங்​கு ​முறை அமைப்​பு​களு​டன் தொடர்ந்து தொடர்​பில் உள்​ளன. விமானங்​களை இயக்​கச் சாதகமான சூழல் நில​விய நேரங்​களில் மட்​டும் சேவை​கள் தடையின்றி வழங்​கப்​பட்​டன.

இந்த இக்​கட்​டான காலக்​கட்​டத்​தி​லும் சுமார் 2,19,780 பயணி​கள் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர். வான் ​பரப்பு திறக்​கப்​பட்​டு, பயணம் செய்​வதற்கு ஏற்ற பாது​காப்​பான சூழல் உரு​வான பிறகுதான் வழக்​க​மான வி​மானப் போக்​கு​வரத்து சேவை மீண்​டும் தொடங்​கும்​. இவ்​வாறு ராம்​மோகன்​ நா​யுடு தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT