வணிகம்

இந்​தி​யா​வில் பிப்​ர​வரி மாதத்தில் வாகன விற்பனை 26% அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் கடந்த பிப்​ர​வரியில் வாகன விற்பனை 26% அதி​கரித்​துள்​ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி விகிதங்​களில் மறுசீரமைப்பு செய்​யப்​பட்​டது. இதன்​படி வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைந்​த​தால் விற்​பனை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

கடந்த பிப்​ர​வரி மாதத்​தில், ஒட்​டுமொத்​த​மாக 24,09,362 வாகனங்​கள் விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ள​தாக வாகன விநி​யோகஸ்​தர்​கள் சங்​கக் கூட்​டமைப்பு (எப்​ஏடிஏ) தெரிவித்​துள்​ளது. இது கடந்த 2025-ம் ஆண்​டின் பிப்​ர​வரி மாத விற்​பனை​யான 19,17,934 உடன் ஒப்​பிடும்​போது 25.62% அதிகம் ஆகும்.

          

கடந்த ஆண்டு 13,60,155 ஆக இருந்த இருசக்கர வாக​ன விற்பனை, இந்த ஆண்டு பிப்​ர​வரி​யில் 17,00,505 ஆக அதிகரித்​துள்​ளது. இது​போல, கார் விற்​பனை 3,13,015-லிருந்து 3,94,768 ஆகவும், வர்த்தக வாகன விற்​பனை 78,219-லிருந்து 1,00,820 ஆகவும், 3 சக்கர வாக​னம் மற்​றும் டிராக்டர் விற்​பனை 89,418-லிருந்து 1,17,130 ஆகவும் அதிகரித்​துள்​ளது.

இதுகுறித்து எப்​ஏடிஏ தலை​வர் சி.எஸ்​.விக்​னேஷ்வர் வெளியிட்ட அறிக்​கை​யில், “ஜிஎஸ்டி வரிக் குறைப்​பு, திருமண சீசன், புதிய மாடல்​களின் அறி​முகம் ஆகிய காரணங்​களால் வாகன விற்​பனை கணிச​மாக அதிகரித்தது'' என கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT