பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சிறப்பு சந்தையில், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கரும்பு, மஞ்சள்.| படம்: ம.பிரபு |

 
வணிகம்

கோயம்பேட்டில் குவிந்த கரும்புகள்: ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை

செய்திப்பிரிவு

சென்னை: பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்​டு, கோயம்​பேடு சிறப்பு சந்​தை​யில் கரும்பு விற்​பனை விறு​விறுப்​படைந்​துள்​ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.600 வரை விற்​பனை​யாகிறது.

ஜனவரி 15-ம் தேதி பொங்​கல் கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில், இன்​னும் சில தினங்​களே உள்​ள​தால், தேவை​யான பாரம்​பரியப் பொருட்​களை முன்​கூட்​டியே வாங்க பொது​மக்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

குறிப்​பாக கரும்​பு, மஞ்​சள் கொத்​து, இஞ்சி கொத்​து, வெல்​லம் போன்​றவை பண்​டிகை​யின் முக்​கிய அடை​யாளங்​களாக இருப்​ப​தால், அவற்​றின் தேவை அதி​கரித்​துள்​ளது. இதையொட்டி கோயம்​பேடு சந்​தை​யில் விற்​பனை சூடு​பிடித்​துள்​ளது.

அந்த வகை​யில், கரும்​பு, வாழை, மஞ்​சள் கொத்​து, இஞ்​சி, வெல்​லம் போன்ற பிற பொங்​கல் பொருட்​களும் ஒரே இடத்​தில் கிடைக்​கும் வகை​யில் கோயம்​பேடு அங்​காடி நிர்​வாகம் சார்​பில் சுமார் 7 ஏக்​கர் பரப்​பள​வில் பொங்​கல் சிறப்பு சந்தை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த சிறப்​புச் சந்​தைக்​கு, மதுரை, திண்​டிவனம், விழுப்​புரம் உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து லாரி​கள் மூலம் கரும்புகள் வந்து குவிந்​துள்​ளன. நேற்​றைய கணக்​கீட்​டின்​படி, 200 டன்​னுக்​கும் அதி​க​மான செங்கரும்புகள் சந்​தைக்கு வந்து இறங்​கி​யுள்​ளன.

தொடர்ந்து மேலும் பல லாரி​களில் கரும்புகள் வந்த வண்​ணம் உள்​ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்​டு, கரும்​பின் தரத்​தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை விற்​பனை செய்​யப்​படு​கிறது. ஒருசிலர் ஒரு கட்டு ரூ.800 வரை​யிலும் விற்​பனை செய்​தனர்.

பொங்​கல் பண்​டிகை நெருங்க நெருங்க, கரும்​பு​களின் வரு​கை​யும் தேவை​யும் இன்​னும் அதி​கரிக்​கும் என்​ப​தால், வரும் நாட்​களில் வி​யா​பாரம் களை​கட்​டும்​ என வி​யாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT