வணிகம்

சென்செக்ஸ் 1,205 புள்ளிகள் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மத்​திய கிழக்கு நாடு​களில் நிலவி வரும் போர் பதற்​றத்​தைத் தணிக்​கப் பேச்​சு​வார்த்​தை நடை​பெற்று வரு​வ​தாக​ அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது உலகளா​விய முதலீட்​டாளர்​களிடையே நம்பிக்​கையை ஏற்​படுத்​தி​யது. இதனால் கச்சா எண்ணெய் விலை 6.12% சரிந்து பேரல் ஒன்​றுக்கு 98.09 டாலராகக் குறைந்​தது.

இதுபோல இந்திய ப ங்குச் சந்தைகளும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. மும்பை பங்குச்​சந்​தை​யில் நேற்​றைய வர்த்​தகம் சூடு​பிடித்து சென்செக்ஸ் 1,205 புள்​ளி​கள் (1.63%) உயர்ந்து 75,273.45 புள்ளிகளில் நிலைத்​தது. தேசிய பங்​குச்​சந்தை குறி​யீட்டு எண்​ணான நிஃப்டி 394 புள்​ளி​கள் (1.72%) அதி​கரித்து 23,306.45 புள்​ளி​களு​டன்​ நிலைபெற்​றது. வங்கி, நிதி நிறுவனங்கள், வாகனத் துறை பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.

          
SCROLL FOR NEXT