வணிகம்

சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.6.50 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: சாதகமற்ற சர்​வ​தேச நில​வரங்​களால் பங்​குச் சந்​தைகளில் வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற வர்த்​தகத்​தில் சென்​செக்ஸ் ஆயிரம் புள்​ளி​களுக்​கும் மேல் வீழ்ச்சி கண்​டது. இதன் காரண​மாக முதலீட்​டாளர்​கள் பங்​கு​களின் மதிப்பு ரூ.6.50 லட்​சம் கோடிக்கு மேல் சரிந்து அதிர்ச்சி அளித்​தது.

இதுகுறித்து பங்​குச் சந்தை ஆய்​வாளர் அவி​னாஷ் கோ​ராக்​ஸ்​கர் கூறிய​தாவது: அமெரிக்க பணவீக்க புள்​ளி​ விவரங்​கள் வெளி​யாவதை எதிர்​நோக்கி சர்​வ​தேச சந்​தைகளில் பங்கு வர்த்​தகம் மந்​த​மாகவே காணப்​பட்​டது. அதன் தாக்​கம் இந்​திய பங்​குச் சந்​தைகளில் இருந்​தது. ஐடி துறை​யில் ஏஐ தொழில்​நுட்​பத்​தின் வரவு பாதக​மான தாக்​கங்​களை உரு​வாக்​கி​யுள்​ளது. ஐடி பணி​யாளர்​களுக்​கான வேலை வாய்ப்பு நெருக்​கடியை சந்​தித்து வரு​வதையடுத்து அத்​துறை பங்​கு​கள் 7.5 சதவீதம் வரை சரிவை சந்​தித்​தன.

          

இந்த நிலை​யில், டாலருக்கு நிக​ரான ரூபாய் மதிப்​பில் காணப்​படும் அதிக ஏற்ற இறக்​க​மும் பங்​குச் சந்​தைகளுக்கு அச்​சுறுத்​தலாக உள்​ளது. இந்​தி​ய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தையடுத்து சந்​தைகளில் ஏற்​பட்ட ஏற்​றத்தை சாதக​மாக்கி முதலீட்​டாளர்​கள் லாப நோக்​குடன் பங்​கு​களை அதி​கள​வில் விற்​பனை செய்​ததும் பங்​குச் சந்​தை​யின் கடும் வீழ்ச்​சிக்கு வழி​வகுத்​தது.

நேற்​றைய வர்த்​தகத்​தில் சென்​செக்ஸ் 1,048 புள்​ளி​கள் சரிந்து 82,626 புள்​ளி​களி​லும், நிப்டி 336 புள்​ளி​கள் குறைந்து 25,471 புள்​ளி​களி​லும் நிலைபெற்​றது. வெள்​ளிக்​கிழமை வர்த்​தகத்​தில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.6.50 லட்​சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT