மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன.
குறிப்பாக, முன்னணி 50 நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தகத்தின்போது 800 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. நிப்டி 50 குறியீட்டெண் 26,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது. இருப்பினும் வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 610 புள்ளிகள் சரிந்து 85,102-ல் நிலைத்தது. நிப்டி 225 புள்ளிகள் குறைந்து 25,960 புள்ளிகளில் நிலைகொண்டது.
பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 2% வரை வீழ்ச்சி கண்டன. இதனால், நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களின் பங்கு மூலதன மதிப்பு ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது.