வணிகம்

ரிலையன்ஸ் குழுமத்​தின் ரூ.1,021 கோடி சொத்து​கள் முடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான ரூ.1,021 கோடி மதிப்​புள்ள சொத்​து​களை அமலாக்கத்துறை முடக்​கி​யுள்​ளது. இதன்​மூலம், இது​வரை முடக்கப்​பட்ட சொத்​துகளின் அளவு ரூ. 20,367 கோடி ஆக உயர்ந்துள்​ளது.

அனில் அம்​பானிக்​குச் சொந்​த​மான ரிலை​யன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்​றும் ரிலை​யன்ஸ் கமர்​ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறு​வனங்​கள் பொது​மக்​களிடம் மற்​றும் வங்​கி​களிடம் இருந்து பெறப்​பட்ட நிதியை தவறாக பயன்​படுத்தி மோசடி செய்​த​தாக பல வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்குகளை அமலாக்​கத்​துறை விசா​ரித்து அந்​நிறு​வனத்​திற்​குச் சொந்​த​மான சொத்​துகளை முடக்கி வரு​கிறது. அதன்​படி, தற்​போது ரூ.1,021 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை முடக்​கி​யுள்​ளது.

இதுகுறித்து அமலாக்​கத்​துறை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ரிலை​யன்ஸ் ஹோம் ஃபை​னான்ஸ் லிமிடெட் மற்​றும் ரிலை​யன்ஸ் கேபிடல் ஃபை​னான்ஸ் லிமிடெட் ஆகிய நிறு​வனங்​கள் மூலம், பொது​மக்​களிடம் இருந்து ரூ.15,548 கோடி நிதி திரட்​டப்​பட்​டது. இவ்​வாறு திரட்​டப்​பட்ட பொது நிதி​யானது, ரிலை​யன்ஸ் அனில் அம்​பானி குழு​மத்​தின் முழுக் கட்​டுப்​பாட்​டிலும், மேலாண்​மை​யிலும் இயங்கி வந்த போலி நிறு​வனங்​கள் மற்​றும் அதன் குழும நிறு​வனங்​கள் மூல​மாகத் திட்​ட​மிட்டு மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கு தொடர்​பாக தற்​போது மேலும் சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. கைப்​பற்​றப்​பட்ட சொத்​துகளில் ரிலை​யன்ஸ் பவர் நிறு​வனத்​தின் பங்​கு​களும் அடங்​கும். இந்த பங்​கு​களை ரிலை​யன்ஸ் இன்ஃப்​ராஸ்ட்​ரக்​சர் நிறு​வனம் தன் வசம் வைத்​திருந்​தது. இவை தவிர, சாசன் பவர் மற்​றும் ரிலை​யன்ஸ் பவர் ஆகிய நிறு​வனங்​களிட​மிருந்து வர வேண்​டிய கடன் தொகை தொடர்​பான சொத்​துகளும் அடங்​கும். பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் இந்​தச் சொத்​துகள் அனைத்​தும் முடக்​கப்​பட்​டுள்​ளது.

இது​வரை, சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின் கீழ் நான்கு அமலாக்க வழக்​கு​களும், அந்​நியச் செலா​வணி மேலாண்​மைச் சட்​டத்​தின் கீழ் மூன்று வழக்​கு​களும் இந்த நிறு​வனத்​திற்கு எதி​ராகப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த வழக்​கின் விசா​ரணைக்​காக 80-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம், ரிலை​யன்ஸ் அனில் அம்​பானி குழு​மத்​தின் மீதான வழக்​கு​களில் இது​வரை முடக்​கப்​பட்ட மொத்த சொத்​துகளின் மதிப்பு ரூ.20,367 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

மேலும், அந்​நியச் செலா​வணி மேலாண்​மைச் சட்​டத்​தின் கீழ் ரூ.77.86 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் முடக்​கப்​பட்​டுள்​ளன. ரிலை​யன்ஸ் குழு​மத்​தைச் சேர்ந்த 8 உயர் அதி​காரி​கள் மற்​றும் நெருங்​கிய தொடர்​பில் இருந்​தவர்​கள் இது​வரை சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின் கீழ் கைது செய்​யப்​பட்டு நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT