வணிகம்

‘ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்’

ஜேஎல்​எல் ஆய்வு நிறு​வனம் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் ரியல் எஸ்​டேட் முதலீட்டு அறக்கட்டளை சந்தை (ஆர்​இஐடி) 10.8 லட்​சம் கோடி​யாக வளர்ச்சி அடையும் என்று ஜேஎல்​எல் ஆய்வு நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: ஆர்​இஐடி சந்தை மதிப்பு சமீபத்​தில் ரூ.1 லட்​சம் கோடியை தாண்​டியது. இந்த நிலை​யில், அலு​வல​கம் மற்​றும் சில்​லறை விற்​பனைத் துறை​களில் காணப்படும் வேக​மான வளர்ச்​சியை அடுத்து, அடுத்த 4 ஆண்​டு​களில் இந்த மதிப்​பானது ரூ.10.8 லட்​சம் கோடி​யாக அதி​கரிக்கும். இந்த வளர்ச்​சி​யில் அலு​வலக பிரி​வின் பங்கு மட்​டும் 65.3 சதவீதம் அளவுக்கு இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

2019-ம் ஆண்​டில் 33 மில்​லியன் சதுர அடியை நிர்​வகித்து வந்த ஐந்து பட்​டியலிடப்​பட்ட அறக்​கட்​டளை​களில் ஆர்​இஐடி 2025-ல் 174 மில்​லியன் சதுர அடி​யாக வளர்ச்சி கண்​டுள்​ளது. இதில், கையகப்படுத்​தப்​பட்ட அளவு 91 சதவீத​மாகும்.

இதுகுறித்து ஜேஎல்​எல் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் லதா பிள்ளை கூறுகையில், “இந்​திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அதிகரித்து வருகிறது. இதன்​ காரணமாக, நடப்பு நிதி​யாண்டின் முதல் பாதி​யில் ஆர்இஐடி-​யின் சந்தை மூலதனம் 6 மடங்கு உயர்ந்துள்​ளது" என்​றார்​.

SCROLL FOR NEXT