வணிகம்

பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் ரூ.6.15 லட்சம் கோடி

செய்திப்பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் வருமாறு: கடந்த 2020-21 நிதி யாண்டில் பொதுத் துறை வங்கிகள் ஒட்டுமொத்த அளவில் அதிகபட்சமாக ரூ.1.33 லட்சம் கோடியை வாராக் கடனாக அறிவித்தன.

இது, 2021-22-ல் 1.16 லட்சம் கோடியாக குறைந்து பின்னர் 2022-23-ல் ரூ.1.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.வாராக் கடன் பிரிவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.65 லட்சம் கோடியை மட்டுமே மீட்டெடுத்துள்ளன.

இந்நிலையில், 2025 செப்டம்பர் நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.6.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT