வணிகம்

எத்தனால் கலப்பு இல்லையென்றால் பெட்ரோல் விலை ரூ.125 வரை உயர்ந்திருக்கும்: பெட்ரோலியத்துறை அமைச்சகம் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பெட்​ரோலில் 20 சதவீத எத்​த​னால் கலப்பு செய்​யப்​பட​வில்லை என்​றால், ஈரான் போர் சமயத்​தில் பெட்​ரோல் விலை லிட்​டருக்கு ரூ.125-ஆக அதி​கரித்​திருக்​கும் என மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

அரசின் இ20 திட்​டத்​தில் 80% பெட்​ரோலுடன் 20% எத்​த​னால் கலந்து விற்​பனை செய்​யப்​படு​கிறது. இத்​திட்​டம் எதிர்க்​கட்​சிகள் மற்​றும் நுகர்​வோர் அமைப்​பு​களிட​மிருந்து கடும் விமர்​சனங்​களை எதிர்​கொண்​டுள்​ளது. 2023-ம் ஆண்​டுக்கு முந்​தைய வாக​னங்​களை வைத்​துள்ள பல உரிமை​யாளர்​கள், இ20 பெட்​ரோலால் மைலேஜ் குறைவ​தாக​வும், பராமரிப்​புச் செலவு அதி​கரிப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த புகார்​களை நிராகரித்​துள்ள பெட்​ரோலி​யத்​துறை அமைச்​சகம் 4-வது முறை​யாக அளித்​துள்ள விளக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

அமெரிக்​க-ஈ​ரான் போரின் போது கச்சா எண்​ணெய் விலை விண்​ணைத் தொட்​டது. சர்​வ​தேசச் சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை பீப்​பாய் ஒன்​றுக்கு 135 அமெரிக்க டாலரை எட்​டியது. அப்​போது பெட்​ரோலின் விலை டெல்​லி​யில் லிட்​டருக்கு ரூ.125-ஆக உயர்ந்​திருக்​கும். ஆனால் பெட்​ரோலில் 20 சதவீதம் எத்​த​னால் கலந்து விற்​கப்​பட்​ட​தால், ஒரு லிட்​டர் பெட்​ரோல் இங்கு ரூ,95-க்கு மட்​டுமே விற்​கப்​பட்​டது.

இதனால் நெருக்​கடி​யின் போது நுகர்​வோருக்கு ரூ.30 வரை சேமிப்பு கிடைத்​தது. ஈரான் போரின் போது சுமார் இரண்டு மாதங்​களாகப் பெட்​ரோல் விலை​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. இறு​தி​யில், மே மாதத்​தில் அரசு லிட்​டருக்கு ரூ. 7.5 உயர்த்​தி​யது. இ20 பெட்​ரோலால், மைலேஜ் சற்று குறைந்​தா​லும் அதனால் கிடைக்​கும் நன்​மை​கள் மிக அதி​கம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT