புதுடெல்லி: அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று முன்தினம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.
ஆனால் நேற்று மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்து 78,918 ஆக நிலைபெற்றது. இது கடந்த 10 மாதங்களில் அதிகபட்ச சரிவு ஆகும். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 315 புள்ளிகள் சரிந்து 24,450 ஆக நிலைபெற்றது. இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது.