வணிகம்

ஆந்திராவில் 20 ஏக்கரில் நிரந்தர வளாகம்: 7,000 பேருக்கு வேலை கிடைக்கும் என இன்போசிஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அமராவதி: தகவல் தொழில்நுட்ப சேவை நிறு​வன​மான இன்போசிஸ், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கர் பரப்​பள​வில் புதிய நிரந்தர வளாகத்தை அமைக்​கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் 20 ஏக்​கரில் நிரந்தர வளாகம் அமைக்​கப்பட உள்​ளது. இப்​பு​திய வளாகத்​தில் சுமார் 7,000 ஐடி பணியாளர்கள் பணி​யாற்​றும் வகையில் வசதி​கள் செய்​யப்​பட​வுள்​ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்​தத் துறை​முக நகரில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமித​மாக உள்​ளது.

ஆரம்​பத்​தில் 250 ஊழியர்​களு​டன் தொடங்​கப்​பட்ட இந்த மையம், தற்​போது 1,900 ஊழியர்​களு​டன் இயங்கி வரு​கிறது. விரை​வில் மேலும் 750 பேர் பணி​யாற்​று​வதற்​கான இடவச​தி​கள் தயார் செய்யப்​பட​வுள்​ளன.

சிறந்த ஐ.டி. மையம்

20 ஏக்​கரில் அமைய​வுள்ள நிரந்தர வளாகம் இப்​பகு​தி​யின் நீண்​ட​கால வளர்ச்​சிக்​குச் சான்​றாக அமை​யும். இந்த மையத்​திற்​காக விசாகப்​பட்​டினம் மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் இருந்து 1,000 புதிய பட்​ட​தா​ரி​களும், 500 அனுபவம் வாய்ந்த பணியாளர்​களும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இது ஆந்​திர அரசின் திறன் மேம்​பாட்​டுத் திட்​டங்​களுக்​குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்​படு​கிறது. இவ்​வாறு இன்​போசிஸ் தெரிவித்துள்​ளது.

ஆந்​திர மாநில தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் நாரா லோகேஷ் கூறுகை​யில், “வி​சாகப்​பட்​டினம் ஒரு சிறந்த ஐடி மையமாக உரு​வெடுத்து வரு​வது, அங்​குள்ள உள்​ளூர் திறமையாளர்​களின் வலிமை​யைக் காட்​டு​கிறது. ஆந்​திர மாநிலத்​தைத் தொழில்​நுட்​பம் மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான உலகளா​விய மைய​மாக மாற்​று​வதே எங்​களது நோக்​கம்.

இன்​போசிஸ் நிறு​வனத்​தின் இந்த விரி​வாக்​கம் எங்​களது கொள்கை முடிவு​களுக்​குக் கிடைத்த அங்​கீ​கார​மாகும். தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் ஆந்​திர மாநிலம் தனது நிலை​யைத் தொடர்ந்து வலுப்​படுத்​தி வரு​கிறது” என்​றார்​.

SCROLL FOR NEXT