வணிகம்

3 மாதங்களில் 50 டன் தங்கத்தை விற்ற இந்தியர்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 3 மாதங்​களில் சுமார் 50 டன் தங்க நகைகளை இந்தியர்கள் விற்​பனை செய்துள்​ளனர். இந்த ஆண்​டின் தொடக்கத்​தில் 10 கிராம் 24 காரட் தங்​கத்​தின் விலை ரூ.1.8 லட்சத்தை எட்​டியது. பின்​னர் படிப்​படி​யாக தங்​கம் விலை குறைந்து தற்​போது 10 கிராம் தங்​கம் தோராய​மாக ரூ.1.4 லட்சமாக இருக்​கிறது. இது ரூ.1.2 லட்​ச​மாக சரியக்​கூடும் என்று சந்தை ஆய்​வாளர்​கள் கணித்து உள்​ளனர்.

இதனால் விலை அதி​க​மாக இருக்​கும்​போதே தங்​கத்தை விற்று நிறை​வான லாபம் அடைய இந்​தி​யர்​கள் விரும்​பு​கின்​றனர். இதன் காரண​மாக கடந்த ஏப்​ரல், மே, ஜூன் மாதங்​களில் சுமார் 50 டன் தங்க நகைகளை இந்​தி​யர்​கள் விற்​பனை செய்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்​பிடும்​போது பழைய தங்க நகைகள் விற்​பனை சுமார் 43% அதி​கரித்​திருக்​கிறது என்று இந்திய புல்​லியன் மற்​றும் ஜூவல்​லர்ஸ் அசோசி​யேஷன் (ஐபிஜேஏ) தெரி​வித்​துள்​ளது.

ஐபிஜேஇ தேசிய செய​லா​ளர் சுரேந்​திர மேத்தா கூறும்​போது, “தங்கம் விலை மேலும் குறைந்​து​விடுமோ என்ற அச்​சத்​தால் இந்​தி​யர்​கள் பழைய தங்க நகைகளை விற்​பனை செய்​கின்​றனர்" என்றார். இதுகுறித்து பொருளா​தார நிபுணர்​கள் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் தங்க தேவை​யில் 90% வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. நடப்​பாண்​டில் இது​வரை 72.4 பில்லியன் டாலர் மதிப்​பிலான தங்​கம் இறக்​குமதி செய்​யப்​பட்டு உள்​ளது.

சமீபத்​திய புள்​ளி​விவரங்​களின்​படி இந்​திய மக்​களிடம் சுமார் 30,000 டன் தங்​கம் உள்​ளது. பழைய தங்​கத்தை மக்​கள் விற்​பனை செய்​யும்​போது இறக்​குமதி கணிச​மாக குறை​யும். இதன்​மூலம் அந்​நிய செலா​வணியை சேமிக்க முடி​யும். இது நாட்​டின் பொருளா​தாரத்தை வலுப்​படுத்​தும்.கடந்த 2025-ல் இந்​தி​யா​வில் சுமார் 125 முதல் 150 டன் தங்​கம் மறுசுழற்சி செய்​யப்​பட்​டது. நடப்பாண்​டில் இது 250 டன்​களாக அதி​கரிக்​கக்​கூடும். இவ்​வாறு அவர்கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT