வணிகம்

தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

சென்​னை: தமிழகத்​தில் வணிக ரீதி​யான எல்பிஜி ஒதுக்​கீடு உடனடி​யாக 70 சதவீதம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக இந்​திய எண்​ணெய் கழகத்தலை​வர் ஏ.எஸ்​.சஹானி தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் எரிபொருள் நிலைமை குறித்​து, இந்​திய எண்ணெய் கழகத் தலை​வர் ஏ.எஸ்​.சஹானி சென்​னை​யில் நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர் நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுத்​தி​கரிப்பு திறன்​கள் ஏறத்​தாழ முழு அளவில் இருப்​ப​தால் பெட்​ரோல், டீசல், விமானத்​துக்​கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநி​யோகத்​தில் சிக்​கல் இல்​லை.

          

நாள்​தோறும் சுமார் 5 லட்சம் சிலிண்​டர்​கள் என்ற தமிழகத்​தின் சமையல் எரி​வாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்​யும் நிலை​யில் எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​கள் உள்​ளன. வீட்டு உபயோக சமையல் எரி​வா​யுக்கு அதி​கபட்ச முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது.

சில பகு​தி​களில் 6 முதல் 8 நாட்​கள் வரை காத்​திருப்பு காலம் இருப்​பதை குறைப்​ப​தற்கு முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் போன்ற அத்​தி​யா​வசி​யப் பகு​தி​களுக்கு எந்​த​வித​மான கட்​டுப்​பாடும் இல்​லாமல் 100 சதவீதத் தேவைப் பூர்த்தி செய்​யப்​படு​கிறது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20 நாட்​கள் வரை கால​தாமதம் தொடர்​பாக விரி​வானப் பகுப்​பாய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது. சனிக்​கிழமைக்​குள் இத்​தகைய பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணப்​படும்.

திடீர் சோதனைகள்

பதுக்​கல் மற்​றும் முறை​கேடு​களை தடுக்க மாநில அரசு 10,000-க்​கும் அதி​க​மான திடீர் ஆய்​வு​களை மேற்​கொண்​டது.எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​கள் முன்​கூட்​டியே அறிவிக்​காமல் 1,500-க்​கும் அதி​க​மான திடீர் சோதனை​களை தமிழகம் முழு​வதும் மேற்​கொண்​டுள்​ளது.

மக்​களின் அனைத்து தேவை​களை​யும் பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்​ணெய் இருப்​பில் உள்​ள​தால், எரிபொருட்​கள் வாங்​கு​வது தொடர்​பாக மக்​கள் பீதி​யடைய வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT