வணிகம்

இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கச்சா எண்​ணெய் விலை உயர்​வால் இந்​திய எண்ணெய் நிறு​வனங்​களுக்கு தின​மும் சுமார் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்​பட்டு வரு​கிறது. இதை சமாளிக்க விலையை ஏற்ற வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு எண்​ணெய் நிறு​வனங்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளன.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக, ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டது. மேலும் இந்தப் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் அச்சமும் நிலவுகிறது. அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் கப்பல்களும் முற்றுகையிட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை.

இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல், காஸ் விலை 50 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. இதையடுத்​து, இந்​தி​யா​வின் அண்டை நாடுகள் மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் பெட்​ரோல், டீசல், சமையல் எரி​வாயு விலைகள் உயர்த்​தப்​பட்​டன. ஆனால், இந்தியாவில் அவற்​றின் விலை உயர்த்​தப்​பட​வில்​லை. அதே​நேரம் வர்த்தக சிலிண்​டர் விலை மட்​டும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும், எண்ணெய் நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை ஈடு​கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்​கியது. இதன் மூலம் இந்​தி​யா​வில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

எனினும், எரிபொருள் விலையை உயர்த்​தாத​தால், இந்​தி​யன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்​ரோலி​யம் (பிபிசிஎல்) மற்​றும் ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் (ஹெச்​பிசிஎல்) ஆகிய நிறு​வனங்​களுக்​குத் தின​மும் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 வாரங்​களில் சுமார் ரூ.1 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. நுகர்​வோருக்​குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த நிறு​வனங்​கள் நஷ்டத்​தைத் தாங்​கிக் கொண்​டாலும், நிதி ரீதி​யாக இது எவ்​வளவு காலம் சாத்​தி​யம்​ என்ற கேள்​வி எழுந்​துள்​ளது.

SCROLL FOR NEXT