வணிகம்

புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

மத்திய வர்த்தக துறை செயலாளர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் புதிய வரி விதிப்பு முறை அமலாகும் வரை அந்த நாட்​டுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவது நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன. இதில் இந்​தி​யா​வுக்கு 18% வரி விதிக்கப்​படும் என உடன்​பாடு எட்​டப்​பட்​டது. எனினும் இது தொடர்​பான ஒப்​பந்​தம் மார்ச் மாதத்​தில் கையெழுத்​தாகும் என தெரிவிக்கப்பட்​டது. இதற்கிடையில், உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக வரி விதித்தது செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​தது.

          

இருப்​பினும், சில மணி நேரங்​களுக்​குப் பிறகு, வர்த்தக சட்​டத்​தின் 122-வது பிரி​வின்​படி, 10 சதவீத வரி விதிப்​ப​தாக ட்ரம்ப் அறிவித்தார். பின்​னர் இந்த வரியை 15 சதவீத​மாக உயர்த்​தி​னார். இந்த வரி விதிப்பை 150 நாட்​களுக்கு மட்​டுமே அமல்​படுத்த முடியும். இதையடுத்​து, திட்​ட​மிட்​டபடி அமெரிக்கா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாவது நிறுத்திவைக்​கப் ​பட்​டுள்​ள​தாக மத்திய அரசு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் புதிய வரி விதிப்​புக் கட்​டமைப்பு நடை​முறைக்கு வந்த பின்​னரே இந்​தி​யா- அமெரிக்கா இடையி​லான ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று வர்த்தக துறைச் செய​லா​ளர் ராஜேஷ் அகர்​வால்​ நேற்​று தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT