கோப்புப்படம்
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.26) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-ஐ கடந்து விற்பனையாகிறது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.26) கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1.20,200-க்கு விற்பனை ஆகிறது.
24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,31,128-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.1,00,000-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.375-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.3,75,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 91.63 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அரசியல் சூழல்களின் எதிரொலியாக, பாதுகாப்பு கருதி தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் புதிய உச்சத்துக்கு காரணம்.