வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 அதிகரிப்பு

வேட்டையன்

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.6) பவுனுக்கு ரூ.320 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 அதிகரித்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​றது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,040-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.320 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.96,320-க்கும் விற்பனை ஆகிறது.

24 காரட் சுத்த தங்​கம் பவுன் ஒன்றுக்கு ரூ.1,05,080 என விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.80,320-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.199-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.1,99,000-க்கு விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT